search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "recovered"

    • தியாகராஜன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • லவ்டேல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    ஊட்டி,

    குன்னூரை அடுத்த ஆறுகுச்சி மீன்மலையை சோ்ந்தவா் தியாகராஜன் (35), கூலி தொழிலாளி. இவருக்கு தங்க மணி என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனா்.

    தியாகராஜன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். எனவே தங்க மணி கணவரிடம் கோபித்து கொண்டு சொந்த ஊரான கூடலூருக்கு சென்று விட்டாா். இதனால் தியாகராஜன் பெற்றோருடன் வசித்து வந்தாா்.

    இந்த நிலையில் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் காசோலை பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. எனவே அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா். அதில் பாலத்தின்கீழ் இறந்து கிடந்தவர் தியாகராஜன் என்பது தெரிய வந்தது.

    அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தியாகராஜனின் மனைவி தங்கமணி அளித்த புகாரின் பேரில், லவ்டேல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மீட்கப்பட்ட இடங்களில் கோவில் சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பல நூறு ஏக்கர்கள் உள்ளன. கோவில்களுக்கான தினசரி பூஜை, பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான வருவாயைப் பெறும் வகையில் வழங்கப்பட்ட இந்த கோவில் நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.அவற்றை மீட்டெடுக்க தற்போது அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உடுமலை தாலுகா வாகத்தொழுவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் திருப்பூர் இணை ஆணையரின் உத்தரவுப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் ரூ. 3 கோடி மதிப்புள்ள 10.69 ஏக்கர் நிலத்தை தானாகவே ஒப்படைக்க முன் வந்தனர். மேலும் கொங்கல்நகரம் மாரியம்மன், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 17.88 ஏக்கர் புன்செய் நிலத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஒப்படைக்க முன்வந்தனர். இதனையடுத்து திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர் சுமதி, செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் இடம் மீட்கப்பட்டு கோவில் சார்பாக அந்த இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

    உடுமலை தாலுகாவில் 2 கோவில்களுக்குச் சொந்தமான ரூ. 6 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 28.57 ஏக்கர் புன்செய் நிலங்கள் மீட்கப்பட்ட தகவலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மாநகர பகுதியில் திருட்டுப் போன செல்போன்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சுமார் ரூ.25 லட்சத்து 2500 மதிப்பிலான திருட்டுப் போன 100 செல்போன்களை போலீசார் மீட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் சைபர் கிரைம் தொடர்பான புகார் மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் மாநகர பகுதியில் திருட்டுப் போன செல்போன்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்- இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வித்யா லட்சுமி, கலை சந்தனமாரி, தொழில்நுட்ப சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் சுமார் ரூ.25 லட்சத்து 2500 மதிப்பிலான திருட்டுப் போன 100 செல்போன்களை போலீசார் மீட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும்,பல்வேறு ஆப்கள் மூலம் ஓ.டி.பி. பெற்றுக் கொண்டு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மோசடி செய்யப்பட்ட சுமார் 29 பேருடைய ரூ.34 லட்சத்து 92 ஆயிரத்து 133-ஐ மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

    இதில் கமிஷனர் அவினாஷ்குமார் கலந்துகொண்டு உரியவர்களிடம் செல்போன் மற்றும் மீட்கப்பட்ட பணத்தினை வழங்கினார்.

    • பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.
    • மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.அவ்வகையில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ஜன்னத் என்பவர் 32 லட்சம் ரூபாய், ஊத்துக்குளியை சேர்ந்த பாலாஜி என்பவர் டிரேடிங்கில் 36 ஆயிரத்து 500 ரூபாய், பல்லடத்தை சேர்ந்த மோகன் என்பவர் விளம்பரத்தை பார்த்து பணம் செலுத்தி 7 ஆயிரத்து 999 ரூபாய் மற்றும் இணையவழி வேலைவாய்ப்பில் உடுமலையை சேர்ந்த விசாலி என்பவர் 5 ஆயிரத்து 100 ரூபாய் இழந்தனர்.

    இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 4 வழக்குகளில் மொபைல் போன் எண்களை கண்டறிந்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
    • இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செண்பகப்பிரியா மற்றும் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதில் தொலைந்த மற்றும் திருடுபோன ரூ.7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் தென்காசியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார்.

    மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

    பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரி வித்தார்.

    செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட போலீசாருக்கு தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.

    • ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் தெரிவித்தார்
    • பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது

    அரியலூா் :

    அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 28 -ந் தேதி தொடங்கிய இந்து உரிமை மீட்பு பிரசாரம் வரும் 31-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்துக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்துக்கள் பள்ளி, கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல தடைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதே மற்ற மதத்தினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால் அனுமதி கிடைப்பதில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு உள்ளது போல், கோயில்களும் இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பேட்டியின் போது மாநில பொறுப்பாளா்கள் பொன்னையா, முருகானந்தம், திருச்சி கோட்ட பொறுப்பாளா் குணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது18). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். இதில் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். அவரை தேடி வந்தனர்.

    ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் தோட்டாபவன் கல்யாண் (வயது20). செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் நேற்று மாலை அவர் கடற்கரை கோவில் அருகே குளித்தபோது கடலில் மூழ்கி மாயமானார். அவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ரமேஷ் உடல் புலிக்குகை அடுத்த பட்டிப்புலம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதே போல் கல்யாண் உடலும் கரை ஒதுங்கியது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அம்மன் கோவிலில் திருட்டு போன ரூ.5 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் பங்களாவில் மனோண்மணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2017-ம் ஆண்டு மரகதலிங்கம், அம்மனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கிரீடம், தங்க தாலி, தங்க ஒட்டியாணம் போன்ற நகைகள் திருட்டு போனது. மரகதலிங்கம் மட்டும் ரூ.5 கோடி மதிப்பு உடையது.

    இது தொடர்பாக வேட்டவலம் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரித்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கடந்த 10 நாட்களாக தனிப்படை போலீசாருடன் இணைந்து, வேட்டவலம் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையில் நேற்று மாலை ஜமீன் பங்களா அருகே உள்ள குப்பை தொட்டியில், கோவிலில் திருட்டு போன மரகதலிங்கம் அனாதையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பொன் மாணிக்கவேல், வேட்டவலம் போலீசாருடன் சென்று குப்பை தொட்டியில் கிடந்த மரகதலிங்கத்தை மீட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவையில் குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாகூர்:

    புதுவை நோனாங்குப்பம் புதுக்காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது28), கட்டிட தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள லோகநாதன் நேற்று மதுகுடிப்பதற்காக மனைவி கவிநிதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கவிநிதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய லோகநாதன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள சுண்ணாம்பாற்று பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் ஆற்றில் இறங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து லோகநாதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலன் இல்லை. மேலும் இருள் சூழந்ததால் மீட்பு நடவடிக்கையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மீன்வலையில் சிக்கிய நிலையில் லோகநாதனின் உடல் அதே இடத்தில் மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், சுமார் 10 கோடி மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. #UP
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை அமோகமான நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமீபத்தில் பட்டாசு கிடங்கு ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உன்னாவோ பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் மூலம் கிடங்கில் அளவுக்கு அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், முறையான ஆவணங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்காத நிலையில், அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. #UP
    கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறவும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கூடலூர் அருகே செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்கள் அமைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் மகேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்வேதா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று செருமுள்ளி புழம்பட்டியில் அரசு நிலம் 1 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்காக அப்பகுதியில் பயிரிட்டு இருந்த தேயிலை செடிகளை வெட்டினர். பின்னர் மீட்கப்பட்ட 1 ஏக்கர் அரசு நிலத்தை பழங்குடியினர் நலத்துறை வசம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க அரசு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் 1 ஏக்கர் மட்டும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.


    மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. #MaharashtraAccident
    மும்பை:

    மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் சத்தாரா என்ற இடத்துக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்றுமுன்தினம் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் ராய்காட் மாவட்டம் போலட்பூர் மலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள 500 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.



    இந்த கோர விபத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் டிரைவர் என 33 பேர் உடல் சிதறி பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பல்கலைக்கழக ஊழியர் பிரகாஷ்சாவந்த் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பஸ் விழுந்து நொறுங்கிய இடம் செடி, கொடிகள் அடர்ந்த பகுதி என்பதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. முதல் கட்டமாக 14 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டு இருந்தன. இந்த உடல்களை மீட்பதற்கு மட்டுமே 6 மணி நேரம் ஆனது.

    சவாலாக இருந்த மீட்பு பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது. நேற்று வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.  #MaharashtraAccident #Tamilnews 
    ×