என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது
Byமாலை மலர்30 May 2022 9:55 AM GMT (Updated: 30 May 2022 9:55 AM GMT)
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது18). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். இதில் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். அவரை தேடி வந்தனர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் தோட்டாபவன் கல்யாண் (வயது20). செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் நேற்று மாலை அவர் கடற்கரை கோவில் அருகே குளித்தபோது கடலில் மூழ்கி மாயமானார். அவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ரமேஷ் உடல் புலிக்குகை அடுத்த பட்டிப்புலம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதே போல் கல்யாண் உடலும் கரை ஒதுங்கியது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கழுக்குன்றம் அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது18). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். இதில் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். அவரை தேடி வந்தனர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் தோட்டாபவன் கல்யாண் (வயது20). செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் நேற்று மாலை அவர் கடற்கரை கோவில் அருகே குளித்தபோது கடலில் மூழ்கி மாயமானார். அவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ரமேஷ் உடல் புலிக்குகை அடுத்த பட்டிப்புலம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதே போல் கல்யாண் உடலும் கரை ஒதுங்கியது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X