search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை மீட்க வேண்டும் - இந்து முன்னணி மாநிலத் தலைவா் பேட்டி
    X

    ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை மீட்க வேண்டும் - இந்து முன்னணி மாநிலத் தலைவா் பேட்டி

    • ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் தெரிவித்தார்
    • பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது

    அரியலூா் :

    அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 28 -ந் தேதி தொடங்கிய இந்து உரிமை மீட்பு பிரசாரம் வரும் 31-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்துக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்துக்கள் பள்ளி, கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல தடைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதே மற்ற மதத்தினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால் அனுமதி கிடைப்பதில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு உள்ளது போல், கோயில்களும் இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பேட்டியின் போது மாநில பொறுப்பாளா்கள் பொன்னையா, முருகானந்தம், திருச்சி கோட்ட பொறுப்பாளா் குணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×