என் மலர்

    நீங்கள் தேடியது "cell phone theft"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வகுமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வகுமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இது குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் சமீப காலமாக வழிப்பறிக் கொள்ளையர்கள், நடந்து செல்லும் பெண்கள் உட்பட பல்வேறு நபர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் மற்றும் பணம், நகைகளை பறித்து செல்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார்.
    • இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அப்பு முதலி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). இவர் தனது ஊரில் ஹார்ட்வேர் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தோஷ் நேற்று கடை வேலை விஷயமாக சேலத்திற்கு வந்தார். அவர், பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    பஸ், புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார். இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணை

    யில், அந்த வாலிபர் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியை சேர்ந்த அப்பாசாமி மகன் தருண் (20) என்பது தெரியவந்தது.

    மற்றோரு சம்பவம்

    இதேபோல் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு (33) என்பவர் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் வழியாக பஸ் வெளியே வரும் சமயத்தில் இவரது அருகில் இருந்த 2 சிறுவர்கள், சேட்டு பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடினார்கள். இதைக் கண்ட சக பயணி ஒருவர் 2 சிறுவர்களையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்போன் திருடியதால் தலையில் கல்லை போட்டு ரவுடியை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார்.
    • குடிபோதையில் அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசினர் மாணவர் விடுதி வளாகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவரின் மகன் உதயகுமார் என்ற கொக்கி குமார் என்பது தெரியவந்தது. பிரபல ரவடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசா ரணையில் கொக்கி குமாரை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது போலீஸ் நிலை யங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவரும், கொலையான கொக்கி குமாரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ள னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேசின் செல்போனை கொக்கி குமார் திருடி விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த விக்னேஷ் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கொக்கி குமார் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருப்பதை அறிந்த விக்னேஷ் குடிபோதையில் அங்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    போதையில் இருந்த விக்னேஷ், கொக்கி குமாரை கீழே தள்ளி அருகில் இருந்த பாறாங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே கொக்கி குமார் பரிதாபமாக இறந்தார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தலைமறை வாக உள்ள விக்னேஷ் போலீ சார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிசிடிவி காட்சி ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் மண்டி வீதியில் ஆரணி டவுன் வி.ஏ.கே நகர் பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் செல்போன் உதிரி பாகம் மற்றும் ரீ சார்ஜ் கடை நடத்தி வருகின்றார்.

    நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து கருணாகரன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் கடையில் உள்ளே வந்தார்.

    சிறிது நேரத்தில் திரும்பி பார்த்த போது டிப்டாப் ஆசாமி காணவில்லை இதனையடுத்து தனது கடையில் மேஜை மீது வைத்திருந்த செல்போன் காணாததை கண்டு கருணாகரன் அதிர்ச்சியடைந்தார். மேலும் தன் செல்போன் கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தார்.

    அப்போது டிப்டாப் ஆசாமி செல் போனை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து கருணாகரன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
    • குழந்தையுடன் சென்று கைவரிசை காட்டிய தம்பதிக்கு வலைவீச்சு

    ஆத்தூர்:

    ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

    செல்போன் திருட்டு

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பாத்திரக் கடை உள்ளது. இந்த கடைக்கு தேவையான பாத்திரங்கள் நேற்று காலை வெளியூரில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்தது.

    இந்த வாகனத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்தார். இவர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை வண்டியின் முன் பகுதியில் வைத்தவிட்டு வாகனத்தின் மேலே ஏறி மழை பாதுகாப்புக்காக தார்பாய் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே குழந்தையுடன் சென்ற தம்பதி, வாகனத்தில் செல்போன் இருப்பதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பு அனுப்பிவிட்டு குழந்தையுடன் சென்று அப்பெண்ணின் கணவர், செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதன் சி.சி.டி.வி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தம்பதிக்கு வலைவீச்சு

    இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் ெசல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சேலம் ரெயில் நிலையம் வந்ததும் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கினார்.
    • பின்னர் உள்ளே சென்று பார்த்த போது போனை காணவில்லை.

    சேலம்:

    சென்னை விரும்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 48). இவர் பெங்களூ ரில் இருந்து விருதுநகர் செல்வதற்காக நகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.5 கோச்சில் 19 நம்பர் சீட்டில் நேற்று முன்தினம் பயணம் செய்தார்.

    அப்போது ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் ெசல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சேலம் ரெயில் நிலையம் வந்ததும் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கினார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது போனை காணவில்லை. இது குறித்து அவர் ெரயில்வே போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று காலை காவல் உதவி ஆய்வாளர் தங்க ராசு பிளாட்பாரம் - 1-ல் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தே கத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரணை நடத்தி யதில் அவர் செல்போன் திருடியது தெரியவந்தது அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்ததில் சேலம் பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
    • பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள, தனியார் செல்போன் கடையில், 2 பெண்கள், செல்போன்கள் வாங்குவதாகக் கூறி பல செல்போன்களை எடுத்து காட்டச்சொல்லி பார்த்துள்ளனர். அப்போது கடையின் ஊழியர் கவனிக்காத நேரத்தில், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுப்பதையும், அந்த செல்போனை அந்தப்பெண் தனது புடவையில் மறைத்து வைப்பதையும், கடையின் மேலாளர் முகமது பக்ருதீன் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.

    தொடர்ந்து, கடை மேலாளர், ஊழியர்கள் உதவியுடன், 2 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர். பின்னர், செல்போனை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என எடுத்து கூறியதும், 2 பெண்களும் செல்போன் திருடியதை ஒப்புகொண்டனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், 2 பெண்களையும், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில், அந்த 2 பெண்களும், நாகப்பட்டினம் ெரயிலடி தெருவைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது60) மற்றும் அவரது மகள் மணிமேகலை (36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடை மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில், போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகர பகுதியில் திருட்டுப் போன செல்போன்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சுமார் ரூ.25 லட்சத்து 2500 மதிப்பிலான திருட்டுப் போன 100 செல்போன்களை போலீசார் மீட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் சைபர் கிரைம் தொடர்பான புகார் மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் மாநகர பகுதியில் திருட்டுப் போன செல்போன்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்- இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வித்யா லட்சுமி, கலை சந்தனமாரி, தொழில்நுட்ப சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் சுமார் ரூ.25 லட்சத்து 2500 மதிப்பிலான திருட்டுப் போன 100 செல்போன்களை போலீசார் மீட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும்,பல்வேறு ஆப்கள் மூலம் ஓ.டி.பி. பெற்றுக் கொண்டு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மோசடி செய்யப்பட்ட சுமார் 29 பேருடைய ரூ.34 லட்சத்து 92 ஆயிரத்து 133-ஐ மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

    இதில் கமிஷனர் அவினாஷ்குமார் கலந்துகொண்டு உரியவர்களிடம் செல்போன் மற்றும் மீட்கப்பட்ட பணத்தினை வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 செல்போன்கள் பறிமுதல்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சின்னக்கோடியூர் பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவர் நேற்று ஹட்டியாவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்லும் ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு பொது பெட்டியில் நேற்று பயணம் செய்துள்ளார்.

    அப்போது காட்பாடியை கடந்து சிறிது நேரத்தில் இவர் வைத்திருந்த செல்போன் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் ரெயில் ஜோலார்பேட்டை 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றதும் தனது பின்புறத்தில் நின்று இருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக அந்த நபரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பின்னர் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பட்ல பள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (27) என்பதும் இவர் ராஜேசின் செல்போன் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் இதே போன்று வேலூர் மாவட்டம் காட்பாடி கிழித்தான் பட்டறை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (52) என்பவர் நேற்று சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் கொண்டிருந்தார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென காணாமல் போனது.

    இது குறித்து தான் பயணித்த பெட்டியில் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஜோலார்பேட்டை ெரயில்வே ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் ெரயில்வே போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (21) என்பதும் இவர் கோவிந்தராஜ் என்பவரின் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ெரயில்வே போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
    • தனிப்படை போலீசார் மாமாங்கத்தில் இருந்த வெங்கேடேச னை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் செல்போன் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    34 செல்போன்கள்

    அந்த நிறுவனத்தில் மதுரை பில்லாபுரத்ைத சேர்ந்த வெங்கடேஷ் (வயது 31) என்பவர் பணியாற்றினார். சேலம் மாமாங்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்த அவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய செல்போன்களை முறையாக கொடுக்காமல் ரூ. 9 லட்சம் மதிப்பிலான 34 செல்போன்களை அவர் முறைகோடு செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கூரியர் நிறுவன மேலாளரான மல்லூரை சேர்ந்த திருநாவுக்கரசு (46) கடந்த மாதம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தேடினர். மேலும் உதவி கமிஷனர் நாகராஜ், இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் மாமாங்கத்தில் இருந்த வெங்கேடேச னை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்யும் வகையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo