search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகளிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
    X

    பயணிகளிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது

    • புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார்.
    • இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அப்பு முதலி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). இவர் தனது ஊரில் ஹார்ட்வேர் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தோஷ் நேற்று கடை வேலை விஷயமாக சேலத்திற்கு வந்தார். அவர், பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    பஸ், புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார். இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணை

    யில், அந்த வாலிபர் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியை சேர்ந்த அப்பாசாமி மகன் தருண் (20) என்பது தெரியவந்தது.

    மற்றோரு சம்பவம்

    இதேபோல் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு (33) என்பவர் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் வழியாக பஸ் வெளியே வரும் சமயத்தில் இவரது அருகில் இருந்த 2 சிறுவர்கள், சேட்டு பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடினார்கள். இதைக் கண்ட சக பயணி ஒருவர் 2 சிறுவர்களையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×