என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கூடலூரில் காய்கறி வியாபாரியின் பணம், செல்போன் திருட்டு
- வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 6-வது வார்டு ஓடைக்காரத்தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி ஷீலாதேவி(34). இவர் கூடலூர் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பழனிவேல்பிள்ளை தெருவில் நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஷீலாதேவி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story






