search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிவேலு காமெடி பாணியில் செல்போன் பறித்த 2 பெண்கள்- போலீசார் தீவிர விசாரணை
    X

    வடிவேலு காமெடி பாணியில் செல்போன் பறித்த 2 பெண்கள்- போலீசார் தீவிர விசாரணை

    • டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் முன்பு போய் தனது ஆட்களை விழச்செய்து மோட்டார் சைக்கிளை ஏற்றிவிட்டதாக கூறி பணம் பறிப்பார். இந்த காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக அமைந்து இருக்கும்.

    இந்த நிலையில் அதே பாணியில் சென்னை புரசை வாக்கத்தில் 2 பெண்கள் ஆட்டோ மீது போய் விழுந்து டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் பால செல்வ விநாயகம். இவர் புரசைவாக்கம் சுந்தரம் வேன் சந்திப்பு மேனாட் தெருவில் தனது ஆட் டோவை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப் போது அந்த வழியாக சென்ற 2 பெண்கள் திடீரென ஆட்டோவின் முன்னால் பாய்ந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்கள் மீது ஆட்டோவை ஏற்றிவிட்டதாக கூறி உறவினர்களை வரவழைத்து உள்ளனர். ஆட்டோ டிரைவர் பால செல்வ விநாயகத்தை தாக்கி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு 2 பெண்களும் தப்பிஓடி தலைமறைவானார்கள்.

    இதுபற்றி பால செல்வ விநாயகம் வேப்பேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×