search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட்டில் இருந்து தங்க கம்மல், செல்போன் திருடியவர் கைது
    X

    மொபட்டில் இருந்து தங்க கம்மல், செல்போன் திருடியவர் கைது

    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
    • சிறையில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 24). இவர் கடந்த 4-ந் தேதி சிகிச்சைக்காக சி எல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மொப்பட்டில் சென்றார்.

    அப்போது செல்போன் மற்றும் தங்க கம்மல் ஆகியவற்றை பைக் சீட்டின் அடியில் வைத்து விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கில் இருந்த செல்போன் மற்றும் தங்க கம்மலை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    சிறிது நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியே வந்த பிரியங்கா மொபட்டின் சீட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அதிலிருந்த நகை மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்தது. பின்னர் பிரியங்கா அங்கு பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தார்.

    அப்போது அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நின்றிருந்த நபர் மொபட்டின் அருகில் வந்து ஆள் நடமாட்டம் இல்லாத போது அதிலிருந்து நகை மற்றும் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து பிரியங்கா வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (45), என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்து சங்கரை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×