search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy murder"

    • பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் என்பது தெரியவந்தது.
    • மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்கோவில் சன்னதி தெரு தீட்சிதர் தோப்பு பகுதியில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் திருச்சி மணச்சநல்லூர் மேல சீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் 50 என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மேலகொண்டையம் பேட்டை பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வசித்து வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரை திருவானைக்கோவிலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவரது தலை துண்டித்து கீழே விழும் அளவுக்கு சரமாரியாக கழுத்து மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். ஆகவே இது பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவானைக்காவல் மற்றும் மணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    சோழவரத்தை சேர்ந்தவர் விக்கி (வயது32). ரவுடி. இவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் ஆவடியை அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பில் தலையில் கல்லைப்போட்டு விக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் முகம் முழுவதும் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    கொலை நடந்த இடத்தில் ஆவடி துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் அன்பழகன், ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இடத்தின் அருகே கேக் வெட்டப்பட்டு சிதறி கிடந்தது. மேலும் மதுபாட்டில்களும் கிடந்தன.

    எனவே இரவு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ரவுடி விக்கியுடன் தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். நேற்று இரவு விக்கி புதிய கன்னியம்மன் நகரில் உள்ள உறவினர் ஒருவரை சந்திக்க வந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பை சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த லிங்கத்தை 1996-ம் ஆண்டு ஒரு கும்பல் ஜெயிலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது. அவரது தலையை மீனாட்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் வைத்துவிட்டுஅந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

    இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முன் விரோதத்தில் லிங்கம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது செல்வம் தலைமறைவானார். கடந்த 27 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் செல்வம் சென்னையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு செல்வத்தை கைது செய்த போலீசார், இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வடசேரி போலீஸ் நிலையத்தில் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு செல்வத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை.
    • தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழப்பாடி புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 42).

    பிரபல ரவுடி. இவர் மீது அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் குல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பாஸ்கர் ரவுடி சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் கண்டிரா தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி அர்ஜு ன்ராஜ் என்பவருடன் அரிவாள், மிளகாய் பொடி ஆகியவற்றை எடுத்து மறைத்து வைத்து கொண்டு சுதாகர் வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் வீட்டு முன்பு நின்று கொண்டு அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டினர். ஆனால் இதை சுதாகர் கண்டுகொள்ளாமல் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார்.

    பின்னர் அவரை வெளியில் வர வைப்பதற்காக பாஸ்கர், அர்ஜுன் ராஜ் ஆகிய இருவரும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதாகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.

    அப்போதும் சுதாகர் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொலையாளிகள் வீட்டின் மேற்கூறையில் கற்களை வீசி தாக்கினர். இதில் ஓடுகள் உடைந்து விழுந்தது.

    அதைத்தொடர்ந்து சுதாகர் தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார்.

    அடுத்த நொடி தயாராக நின்ற பாஸ்கரும், அர்ஜுனும் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுதாகர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திருமானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடினர்.

    பின்னர் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு அர்ஜுன்ராஜை அதிரடியாக கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில், கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பாஸ்கரின் அண்ணன் ஜெகதீசனின் மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த ஜெகதீசனின் சகோதரர் பாஸ்கர் அதிர்ச்சி அடைந்து ரவுடியை கண்டித்தார். அவர்களுக்குள் பல முறை சண்டையும் நடந்தது. இருந்தபோதிலும் சுதாகர் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் நானும் அவரும் சென்று வீட்டுக்குள் இருந்த ரவுடியை வெளியே வர வைத்து வெட்டிக்கொலை செய்தோம் எனக் கூறியுள்ளார்.

    தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
    • வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி. நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கொலையில் தேடப்பட்ட விக்கி என்கிற விக்னேஷ் உள்பட 7 பேர் இன்று காலை திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

    • போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    வேப்பம்பட்டு:

    திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது30). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஜெபராஜ் இன்று காலை வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்னை மார்க்கத்தில் உள்ள தண்டவாளம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது ஒரு கால் மற்றும் தலையில் மட்டும் பலத்த காயம் உள்ளது. எனவே மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அவருடன் மோதலில் உள்ளவர்கள் யார்? யார்? கடைசியாக யாருடன் சென்றார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி.

    நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார்.

    அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    • 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை, மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ் (வயது23). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு 8.30மணி அளவில் ராஜேஷ், மதுரவாயல் கந்தசாமி நகர் 5-வது தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டி சென்ற கும்பல் ராஜேசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்,கோயம்பேடு துணை கமிஷனர் குமார், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்ட ராஜேசுக்கும், திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை நெற்குன்றம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் தங்கையின் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது சுரேசை, ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சங்ககிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் திலக். பிரபல ரவுடி.

    இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா என்கிற அமைப்பின் நகர செயலாளர் மோகன்பாபு என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஓசூர் மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த முனிராஜ் மகன் சசிகுமார் (24) என்பவர் நேற்று சங்ககிரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா முன்னிலையில் சரணடைந்தார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகுமார், சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கான ஆவணங்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.

    • ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.
    • பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.

    பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த அவர் 2-வது மனைவி பிரியாவுடன், மாசிநா யக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி உடையாப்பட்டி பகுதியில், ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் ரஞ்சித்குமாரை விட்டு பிரிந்து தற்போது கள்ளக்கா தலனுடன் வசித்து வருகிறார். இதனால் ரஞ்சித்குமா ருக்கும், முதல் மனைவியுடன் வசித்து வருபவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் ரவுடி ரஞ்சித்குமார் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக, அவருடை நண்பர்க ளான சேலம் அம்பாள் ஏரிரோடு பகுதியை சேர்ந்த மகி என்கிற மகேந்திர பூபதி (23), ஓமலூரை சேர்ந்த புகழேந்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இக்கொலையில் தொடர்பு டைய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கோட்டார் பட்டக சாலியன்விளை பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29).

    இவரது வீட்டிற்குள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பீச் ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து உடைத்தனர். இதுகுறித்து ரஞ்சித்தின் தாயார் சாந்தி நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சிவசங்கர் உட்பட அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சித் அவரது நண்பர் விக்னேஷ் (29) இருவரும் மோட்டார் சைக்கிளில் பெரிய விளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிவசங்கர் இருவரையும் வழிமறித்தார். அப்போது ரஞ்சித்திடம் என் மீது எப்படி நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த அவரது நண்பர் விக்னேசுக்கும் காயம் ஏற்பட்டது. ரஞ்சித், விக்னேஷின் சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விக்னேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து சிவசங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரஞ்சித் மீது சில வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மதுரையில் ரவுடி கொலையில் மது போதையில் நண்பர்கள் பீர் பாட்டிலால் குத்திக்கொன்றது அம்பலமானது.
    • இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உலகனேரி செங்குன்றம் நகர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற டோரா பாலா (வயது 29). இவர் மீது புதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் டோரா பாலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலாவின் வயிற்றில் பாட்டிலால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டது உறுதி யானது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டோரா பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் வினோத் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது டோரா பாலா, வினோத்தின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து வினோத் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சமரசமாக சென்று விடலாம் என கூறி சம்பவத்தன்று இரவு டோரா பாலாவை மது குடிக்க அழைத்து உள்ளனர். வளர்நகர் பகுதியில் டோரா பாலா, வினோத் மற்றும் நண்பர்கள் ஜெகதீஸ்வரன், மேலூர் மாரி, புலி என்ற விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகிய 6 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் டோரா பாலா, வினோத்திடம் தகராறு செய்து அவரது தாயை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வினோத், ஜெகதீஸ்வரன் உள்பட 5 பேர் பீர் பாட்டிலால் டோரா பாலாவை குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட வினோத் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    ×