search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் ரவுடி கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்கள் 

    சேலத்தில் ரவுடி கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

    • ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.
    • பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.

    பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த அவர் 2-வது மனைவி பிரியாவுடன், மாசிநா யக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி உடையாப்பட்டி பகுதியில், ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் ரஞ்சித்குமாரை விட்டு பிரிந்து தற்போது கள்ளக்கா தலனுடன் வசித்து வருகிறார். இதனால் ரஞ்சித்குமா ருக்கும், முதல் மனைவியுடன் வசித்து வருபவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் ரவுடி ரஞ்சித்குமார் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக, அவருடை நண்பர்க ளான சேலம் அம்பாள் ஏரிரோடு பகுதியை சேர்ந்த மகி என்கிற மகேந்திர பூபதி (23), ஓமலூரை சேர்ந்த புகழேந்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இக்கொலையில் தொடர்பு டைய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×