search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bottle stabbing"

    • மதுரையில் ரவுடி கொலையில் மது போதையில் நண்பர்கள் பீர் பாட்டிலால் குத்திக்கொன்றது அம்பலமானது.
    • இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உலகனேரி செங்குன்றம் நகர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற டோரா பாலா (வயது 29). இவர் மீது புதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் டோரா பாலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலாவின் வயிற்றில் பாட்டிலால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டது உறுதி யானது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டோரா பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் வினோத் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது டோரா பாலா, வினோத்தின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து வினோத் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சமரசமாக சென்று விடலாம் என கூறி சம்பவத்தன்று இரவு டோரா பாலாவை மது குடிக்க அழைத்து உள்ளனர். வளர்நகர் பகுதியில் டோரா பாலா, வினோத் மற்றும் நண்பர்கள் ஜெகதீஸ்வரன், மேலூர் மாரி, புலி என்ற விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகிய 6 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் டோரா பாலா, வினோத்திடம் தகராறு செய்து அவரது தாயை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வினோத், ஜெகதீஸ்வரன் உள்பட 5 பேர் பீர் பாட்டிலால் டோரா பாலாவை குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட வினோத் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    ×