search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தொழிலாளி உடல் மீட்பு
    X

    குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தொழிலாளி உடல் மீட்பு

    புதுவையில் குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாகூர்:

    புதுவை நோனாங்குப்பம் புதுக்காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது28), கட்டிட தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள லோகநாதன் நேற்று மதுகுடிப்பதற்காக மனைவி கவிநிதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கவிநிதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய லோகநாதன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள சுண்ணாம்பாற்று பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் ஆற்றில் இறங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து லோகநாதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலன் இல்லை. மேலும் இருள் சூழந்ததால் மீட்பு நடவடிக்கையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மீன்வலையில் சிக்கிய நிலையில் லோகநாதனின் உடல் அதே இடத்தில் மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×