search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire crackers"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு அறிவித்தது.
    • அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு.

    தமிழகத்தில் நேற்று பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காற்று மாசு உள்ளிட்ட காரணங்களுக்காக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவாகியுள்ளது.

    அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.

    தேனி:

    தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதனால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    பட்டாசுகளை வெடிப்ப தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடு வதற்கு பொது மக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பட்டாசு விபத்தில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார்.

    சென்னை:

    நாமக்கல், வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (35), பிரியா (28), செல்வி (55) மற்றும் பெரியக்காள் (73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

    இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு தலா ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இன்று அதிகாலை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது.

    இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் உள்பட மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை.
    • இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும்.

    டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை தடை விதித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார்.

    அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும்.

    தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்.

    டெல்லியில் கடந்த ஆண்டை போல் மாசு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், இந்த முறையும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி தற்காலிகமாக பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    இதில் விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் ஏ 5ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (சலான் மாநகர காவல் அலுவலகத்தில் கிடைக்கும்), பட்டாசுகளை இருப்புவைத்து விற்பனை செய்யப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்களுடன், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட்டிருப்பதுடன், மனுதாரா் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருந்தால் 2022 -23 ஆம் ஆண்டுக்கான சொத்துவரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ. 20க்கான முத்திரைதாளில் வாடகை ஒப்பந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.

    மேலும் கடை அமையவுள்ள இடங்களைப் பாா்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை, தீயணைப்புத் துறை ஆய்வில் திருப்தியடைந்தால் மட்டும் பட்டாசு உரிமம் வழங்கப்படும். அதேவேளையில் குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #FireCrackers #RajendraBalaji
    விருதுநகர்:

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் பிரபல வக்கீல்களை வைத்து தமிழக அரசு வாதாடி வருகிறது. இதன்காரணமாக பட்டாசு தொழிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படவில்லை.


    பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்தித்து உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மத, அரசியல் பேதமின்றி இங்கு கூடி உள்ளீர்கள். அனைவரும் ஒன்று கூடினால் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். காத்திருந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

    முதல்வர், பிரதமரை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். விரைவில் தேங்காய், பழம் வைத்து பூஜை நடத்தி பட்டாசு ஆலைகள் திறக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #FireCrackers #RajendraBalaji
    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    சிவகாசி:

    இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன் காரணமாக பட்டாசு விற்பனை பெருமளவில் சரிந்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பட்டாசு தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


    இதன்காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

    பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும் இன்று (21-ந்தேதி) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது.

    மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    விருதுநகரில் பட்டாசு வெடித்ததில் ஓட்டல் உள்பட 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. #Diwali
    விருதுநகர்:

    விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று பண்டிகை என்பதால் ஓட்டல் மூடப்பட்டு இருந்தது. ஓட்டல் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி, விறகுகளை வைத்திருந்தார்.

    நேற்று இரவுஅந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு விறகு மீது விழுந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்து விறகு எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஓட்டலுக்கும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமரேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு மணி நேரம் போராடி அவர்கள், தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஓட்டலின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் விருதுநகரில் ஒருமணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    விருதுநகர் வாடியான் தெருவில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு பழைய அட்டை, பேப்பர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேப்பர்கள், அட்டைகள் எரிந்து நாசமானது.

    இதேபோல் விருதுநகர் ஆணைக்குழாய் தெருவில் உள்ள ஆதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிட்டங்கியிலும், சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் வைக்கும் இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. #Diwali

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், சுமார் 10 கோடி மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. #UP
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை அமோகமான நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமீபத்தில் பட்டாசு கிடங்கு ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உன்னாவோ பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் மூலம் கிடங்கில் அளவுக்கு அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், முறையான ஆவணங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்காத நிலையில், அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. #UP
    பட்டாசு தொழிலின் பாதுகாவலராக எடப்பாடி பழனிசாமி விளங்குவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
    சிவகாசி

    சிவகாசியில் பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலக மக்களின் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது என்பது பின்னிப் பிணைந்திருக்கின்றது. இந்தியாவின் ஒட்டு மொத்தப் பட்டாசுக்கான தேவையில் 90 சதவீதம் சிவகாசி பகுதியில் இருந்து தான் தயாராகிச் செல்கிறது.

    ஆனால் அவ்வப்போது இந்தத் தொழிலுக்கு சிலரால் இடையூறுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை தன்னம்பிக்கையுடன் போராடி இத்தொழிலை பட்டாசு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாதுகாத்து வந்தனர். தற்போது பட்டாசால் மாசு ஏற்படுவதாகக் கூறி சிலர் நீதிமன்றத்தின் மூலம் இத்தொழிலை அழிக்க முனைந்துள்ளனர்.

    இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி பட்டாசு தொழிலைப் பாதுகாப்பதன் அவசியத்தை விரிவாக வலியுறுத்தினார்.

    அத்துடன் நில்லாமல் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையை தொடர்பு கொண்டு அ.தி.மு.க. எம்.பி.க்களோடு மத்திய அமைச்சர்களை சந்தித்து பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உத்தரவிட்டார். அதன்படி நானும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் பட்டாசு தொழிலதிபர்களுடன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தொழிலை பாதுகாக்க கோரிக்கை மனுக்களை அளித்து வந்தோம்.

    பட்டாசு தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை தமிழக முதல்வர் எடுத்து வருவதால் அவரை பட்டாசுதொழிலின் பாதுகாவலர் என்றே இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் பட்டாசுத் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுவதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

    அதுபோல இந்த மாநாட்டில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளீர்கள். ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்குத் தடை கோருவது குறித்து ஏற்கனவே தலைமைச் செயலாளரைச் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.

    இங்கு வலியுறுத்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், பட்டாசு தொழிலதிபர்கள் அய்யன் அபிரூபன், பயோனியர் மகேஷ்வரன், சோனி கணேசன், ஆறுமுகா மாரியப்பன், காளீஸ்வரி ஏ.பி.செல்வராஜன், லார்டு ஆசைத்தம்பி, சிவகாசி நகர செயலாளர் அசன்பத்ருதீன், ஒன்றியச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன். சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கு பெற்றனர்.
    கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. #FireCracker #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி, தசரா பண்டிகை காலத்தில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக கூறி, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி மற்றும் ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தையர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.



    சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பல்வேறு இந்து அமைப்புகள் என சுமார் 100 பேர் எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன் மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளுடன் தீபாவளி சமயத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு பற்றி கலந்தாலோசித்து ஆலோசனைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தீபாவளியின்போது பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மீது பரிசோதனை நடத்தப்படும். குறைந்த அளவில் புகையை வெளியிடும் பட்டாசுகள் தயாரிக்க வலியுறுத்தப்படும்.

    * சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள் தயாரிக்க அறிவுறுத்தப்படும்.

    * பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு தடை செய்யப்படும். பட்டாசுகளில் அலுமினியம் தாது கலப்பதை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மறு ஆய்வு செய்யும்.

    * தீபாவளிக்கு 14 நாட்களுக்கு முன்பும் தீபாவளி முடிந்து 7 நாட்களுக்குப் பிறகும் அலுமினியம், பேரியம், இரும்புத்தாதுப் பொடி ஆகியவை பட்டாசுகளில் பயன்படுத்துவது குறித்தும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

    * சரவெடிகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைவதால் அவற்றின் தயாரிப்புக்கு தடை விதிக்கலாம்.

    * வெளிநாடுகளைப் போல இந்தியாவின் பெரிய நகரங்களில் குடியிருப்போர் சங்கங்கள் வழியாக குடும்பங்கள் கூட்டாக பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான இடம், மைதானத்தை மாநில அரசுகள் முன்கூட்டியே தீர்மானித்து அறிவிக்கலாம்.

    * மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    மேலே கூறப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் 2 வாரங்களில் அவற்றை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே கோர்ட்டு 2 வாரங்களுக்குள் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், வரும் தீபாவளியில் அமல்படுத்தலாம்.

    இவ்வாறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கு இடையே தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, பா.வினோத் கன்னா ஆகியோர் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

    இத்தனை நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு, சிவகாசியில் அனைத்து ஆய்வு வசதிகளும் கொண்ட மத்திய அரசு நிறுவனமான பட்டாசு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் ஏன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இது குறித்து உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவின் 90 சதவீத பட்டாசு உற்பத்தி தமிழ்நாட்டில் குறிப்பாக சிவகாசியில் நடைபெறுகிறது. அதில் 40 சதவீதம் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. டெல்லி, பட்டாசுக்கான வர்த்தக மையமாக செயல்படுகிறது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கும் டெல்லியில் இருந்து பட்டாசு அனுப்பப்படுகிறது.

    எனவே, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். சிவகாசியின் பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் சிறுகுறு நடுத்தர தொழில் முனைவர்கள் ஆவார்கள். 1,070 பட்டாசு தொழிற்சாலைகளால் 5 லட்சம் குடும்பங்கள் பயன் அடைகின்றன. பட்டாசுகள் பிரச்சினை என்று கருதி, தீர்வாக பட்டாசுக்கு தடை விதிப்பது மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும். பட்டாசு மீதான தடை என்பது கண்டிப்பாக ஒரு தீர்வாக இருக்காது. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

    இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் என்னும் தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் வக்கீல் ஜே.சாயி தீபக் வாதிட்டபோது, “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. இது கொண்டாட்டம் சார்ந்த மத ரீதியான நடவடிக்கை. இந்துக்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதில்லை. சீக்கியர்களும் சமணர்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் பண்டிகைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடிப்பதற்கு எதிரான முறையான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இதுவரை முழுமையாக செய்யப்படவில்லை. இங்கு தீபாவளி என்பது பிரச்சினை அல்ல. சுற்றுச்சூழல் மாசுபடுவதே பிரச்சினை. எனவே மத்திய அரசு பரிந்துரைத்தபடி சில கட்டுப்பாடுகளுடன் பட்டாசு தயாரிப்புக்கும் விற்பனை, உபயோகம் ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கலாம்” என்று குறிப்பிட்டார்.

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #FireCracker #SupremeCourt #Tamilnews
    ×