என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு விபத்து"

    • படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவிலான நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பட்டாசு தொழிற்சாலை 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கியது. முழுக்க முழுக்க பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆலையில் தொழிலாளர்கள் வந்து வேலையை தொடங்கினர். முன்னதாக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து அருகில் இருந்த அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியதுடன், அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளால் 16 அறைகள் இடிந்து தரைமட்டமானது. விபத்து நடந்த பட்டாசு ஆலையில் இருந்து பல மீட்டர் உயரத்திற்கு புகை கிளம்பியது. அதே போல் வெடிச்சத்தம் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பட்டாசு ஆலைக்கு திரண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அருகில் மீட்பு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதில் விபத்து நடந்த அறைகளுக்கு அருகே பலத்த காயங்களுடன் போராடிய ராஜசேகர், ராஜபாண்டி, கண்ணன், கமலேஷ், ராஜேஸ் ஆகிய 5 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை நீக்கி பார்த்தபோது அங்கு பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகுருசாமி என்பவர் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அடுத்தடுத்த அறைகளிலும் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

    இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலை போர்மென் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 1-ந்தேதி சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த சோகம் அடங்குவதற்குள் சாத்தூர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில், கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது.

    எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது.
    • பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து வருகிறது. இந்த விழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு கிராம மக்கள் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட குழுவாகவும் பட்டாசுகள் வாங்கி கோவில் விழாவில் ஆங்காங்கே மக்கள் வெடிப்பார்கள்.

    அந்த வகையில் கஞ்சநாயக்கன்பட்டி பக்கத்து ஊரான கோட்டமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், லோகநாதன் உள்பட 3 பேர் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டிக்கு சென்று பட்டாசுகளை வாங்கியதாக தெரிகிறது. அந்த பட்டாசுகளை ஒரு மூட்டையில் கட்டி மொபட்டில் கஞ்சநாயக்கன்பட்டிக்கு கொண்டு வந்தனர்.

    பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் சாலையோரம் பற்றி எரிந்த தீயில், செல்வராஜ் சென்ற மொபட் பட்டாசுகளுடன் திடீரென நிலைதடுமாறி சாய்ந்து விழுந்தது.

    இதில் மூட்டையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் செல்வராஜ் மற்றும் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் சிதறி பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர் பிரதிமா பகுதியில் உள்ள தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

    இதில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீயை அணைத்த பின் மீட்புக் குழுவினர் உள்ளே இருந்த 7 உடல்கள் மீட்கப்பட்டன. வெடிப்புக்கான காரணாம் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பட்டாசு தயாரிப்பு நடந்து வந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இன்று அதிகாலை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது.

    இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் உள்பட மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு விபத்தில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார்.

    சென்னை:

    நாமக்கல், வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (35), பிரியா (28), செல்வி (55) மற்றும் பெரியக்காள் (73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

    இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு தலா ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • பட்டாசு விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
    • இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தனியார் கல்லூரி யில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடுகளை கலெக்டர் வெளியிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபு ணர்களை கொண்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் பாது காப்பான உற்பத்தி முறையை கையாளுதல் தொடர்பாக, பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதையடுத்து விருதுநகர் மற்றும் சிவகாசி கோட்டங்க ளில் 28 விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டு, இன்று முதல் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற் சாலைகளில், விபத்தில்லா உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு முகாம்கள், கருத்த ரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

    பட்டாசு உற்பத்தி தொழில் சுமார் 50 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதரத்தில் மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த தொழில் வழங்கி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும். நாட்டின் பல்வேறு வளர்ச்சி, முன்னேற்றங்களுக்கு காரணம் தொழிலாளர்கள் தான். அத்தகைய தொழி லாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    எனவே இந்த கருத்த ரங்கை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு அரசின் மூலம் பட்டாசு விபத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவ டிக்கைகளுக்கும் பட்டாசு தொழிலாளர்கள், உறு துணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் இணை இயக்குநர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேல்முருகன் (விருதுநகர்), ரவிசந்திரன் (சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • தோட்டத்தின் மத்தியில் குடிசை தொழிலாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை பார்த்த ஒரு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பட்டாசு ஆலையின் உரிமையாளர், தோட்டத்தின் மத்தியில் குடிசை தொழிலாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். விபத்து நடந்தபோது ஒருவர் மட்டுமே வேலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
    • பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது.

    கடந்த 22-ந்தேதி மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி, பள்ளூரை சேர்ந்த முருகன், குருவிமலையை சேர்ந்த தேவி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன் உள்பட மொத்தம் 9 பேர் சம்பவம் நடந்த அன்றே பலியானார்கள். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

    வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(50), மற்றும் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகிய 2 பேர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர், காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
    • பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 118-வது ஆண்டு ஜாத்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும் பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடைபெற்றது.

    வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

    இதனை பட்டாசு உரிமையாளர் சாதிக் அலி மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து சாமி ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக காலியான இடத்தில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை ஊழியர் சஞ்சீவி வெடித்தார். அதில் இருந்த பறந்த தீப்பொறி அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசுகள் மீது பட்டது. இதில் கொண்டு வந்திருந்த அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பட்டாசு வெடித்து சிதறியதில், பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி, ஊழியர் சஞ்சீவிக்கு ஆகியோர் உடல் கருகினர். சாதிக் அலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    ×