search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks accident"

    • பட்டாசு துகள்களை தீ வைக்க முயன்ற போது விபரீதம்
    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் நரேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார்.

    இந்நிலையில் இவர் நேற்று மதியம் வெடிக்காத பட்டாசு துகள்களை ஒன்று சேர்த்து தீ வைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு துகள்கள் பலமாக வெடித்து முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
    • சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மற்றும் மாநகரத்தில் தற்காலிகமாக அனுமதி பெற்று வைக்கப்படும் பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை சேமிக்கும் கடைகளை போலீசார் மூலம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயம் தகுந்த விசாரணையின் அடிப்ப டையில் அனுமதி அளிக்கப்படும் கடைகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை குவித்திருக்கும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், விபத்துகளை தடுக்கவும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.
    • காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த ராம ரெட்டிபாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5-ம் வார திருவிழாவை நேற்று (சனிக்கிழமை) விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு சாமி ஊர்வலம் நடந்தது.

    அப்போது அங்குள்ள குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.

    சாமி ஊர்வலம் வந்ததும் அங்கிருந்த பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர். அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில்பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அருகில் கூடியிருந்தவர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சூரி, சுரேஷ், பிரபா, பொன்மணி, உள்ளிட்ட 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டாசு விபத்தில் உயிரிழந்த 13 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

    பலியான 13 பேரில் வீடுகளுக்கும் நேரில் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தனது சொந்த நிதியில் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார். அப்போது பா.ம.க. மத்திய மாவட்ட செயலாளர் டேனியலும் உடன் இருந்தார். பின்னர் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா நிருபர்களிடம் கூறுகையில், பட்டாசு விபத்தில் உயரி ழந்தவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசு வழங்கிய 3 லட்சம் ரூபாய் நிதி போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் வைப்பு நிதி யாக தமிழக அரசு வழங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை பாது காக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம்
    • கலெக்டர் குடும்பத்தினரிடம் வழங்கினார்

    ஆலங்காயம்:

    கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உயிரிழந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் முதல் அமைச்சர் நிவாரண நிதி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த தினேஷ்குமாரின் தயார் தனலட்சுமியிடம் வழங்கினார். அப்போது சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை :

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). பட்டாசு தொழிலாளி.

    கடந்த 7-ந் தேதிதியன்று மாலை வாலாஜாவில் உள்ள பட்டாசு குடோனில் சுரேஷ் மற்றும் ராஜேந்திரன் (36)ஆகிய இருவரும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த னர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பொறி பட்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    பட்டாசு குடோனின் சிமெண்ட் ஷீட் மேற்கூரையும், கொட்டகையும் எரிந்து சாம்பலானது.

    இதில் சுரேஷ்க்கும், ராஜேந்திரனுக்கும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சுரேசை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜேந்திரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
    • பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 118-வது ஆண்டு ஜாத்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும் பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடைபெற்றது.

    வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

    இதனை பட்டாசு உரிமையாளர் சாதிக் அலி மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து சாமி ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக காலியான இடத்தில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை ஊழியர் சஞ்சீவி வெடித்தார். அதில் இருந்த பறந்த தீப்பொறி அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசுகள் மீது பட்டது. இதில் கொண்டு வந்திருந்த அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பட்டாசு வெடித்து சிதறியதில், பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி, ஊழியர் சஞ்சீவிக்கு ஆகியோர் உடல் கருகினர். சாதிக் அலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பட்டாசு விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
    • இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தனியார் கல்லூரி யில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடுகளை கலெக்டர் வெளியிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபு ணர்களை கொண்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் பாது காப்பான உற்பத்தி முறையை கையாளுதல் தொடர்பாக, பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதையடுத்து விருதுநகர் மற்றும் சிவகாசி கோட்டங்க ளில் 28 விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டு, இன்று முதல் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற் சாலைகளில், விபத்தில்லா உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு முகாம்கள், கருத்த ரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

    பட்டாசு உற்பத்தி தொழில் சுமார் 50 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதரத்தில் மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த தொழில் வழங்கி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும். நாட்டின் பல்வேறு வளர்ச்சி, முன்னேற்றங்களுக்கு காரணம் தொழிலாளர்கள் தான். அத்தகைய தொழி லாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    எனவே இந்த கருத்த ரங்கை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு அரசின் மூலம் பட்டாசு விபத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவ டிக்கைகளுக்கும் பட்டாசு தொழிலாளர்கள், உறு துணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் இணை இயக்குநர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேல்முருகன் (விருதுநகர்), ரவிசந்திரன் (சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடிபகுதியில் கடந்த 25-ந் தேதி பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணாபாடியை சேர்ந்த கோபி (வயது 46) மற்றும் அவரது மனைவி தீபா (40) ஆகியோர் தீக்காயம் அடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு தொடர்பாக ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கோபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    • தீப்பொறி பார்சலில் விழுந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 68). மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் தனது மகன் சக்கரவர்த்தி (40) என்பவருடன் நேற்று முன்தினம் மளிகை கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு தனது மைத்துனர் கோபி (46) என்பவரை தனபால் அழைத்ததாக கூறப்படுகிறது. கோபி மற்றும் கோபியின் மனைவி தீபா (40) ஆகிய இருவரும் கடைக்கு வந்துள்ளனர்.

    அப்போது தாங்கள் வைத்திருந்த பட்டாசு பார்சலை பிரித்துள்ளனர். அந்த நேரத்தில் சக்கரவர்த்தியின் மகன் பிரஜாத் லோபோ (10) சங்கு சக்கர பட்டாசை வெடித்துள்ளான். அந்தப்பட்டாசு தவறி, கோபி பிரித்து வைத்திருந்த பட்டாசு பார்சலில் விழுந்தது.

    இதில் பட்டாசு பார்சல் வெடித்ததில் கோபி அவரது மனைவி தீபா படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • டாக்டர்களை சந்தித்து, சிறுவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தி தீவிர சிகிச்சை கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
    • அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ரூபி மனோகரன் கேட்டுக்கொண்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட புளியூர்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள டோனாவூர் கிராமத்தில் பட்டாசு விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் டோனாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்

    அங்கு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் நேரில் சென்று சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

    அப்போது டாக்டர்களை சந்தித்து, தகுந்த சிகிச்சை அளிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தி தீவிர சிகிச்சை கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

    குடிநீர் பிரச்சினை

    தொடர்ந்து, டோனாவூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அரசு அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்பு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு கண்ணாடி தேவைப்படும் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை நாங்குநேரி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கினார்.

    பயணிகள் நிழற்குடை

    மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருக்குறுங்குடி டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளிக்கு உட்புறம் பேவர் பிளாக் அமைத்திட வேலையை தொடங்கி வைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பர்கிட்மாநகர் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்திட வேலையை தொடங்கி வைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு தலைவர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு, பாளையங்கோட்டை வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, ஆகிய வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் அலெக்ஸ், கனகராஜ், கணேசன், சங்கரபாண்டியன்நளன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வசந்தா, மாநில மகிளா காங்கிரஸ் இணை செயலாளர்கமலா, பிரியாமுருகன், லதா லெட்சுமி, திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவி, துணை தலைவி, பாளையங்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தெய்வாணை, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, ராபர்ட்சுஜூன், வட்டார துணை தலைவர் செல்வராஜா, கவுன்சிலர் பெல், கிராம காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எபன்ரஞ்சித்சிங் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா சுப்புராய தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர் கீழ் புதுப்பேட்டையில் 15 ஆண்டுகளாக பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் தரணி (48). குமாரின் பட்டாசு கடையில் தரணி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து தெருவில் நடைபெறும் திருவிழாவிற்காக கடையில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து தரணியின் மாடி வீட்டில் வைத்திருந்தார்.

    இன்று காலை மாடியில் பட்டாசு வைத்திருப்பதை பார்த்த தரணியின் மகன் நிர்மல் (20) பட்டாசுகளை ஏன் மாடியில் வைத்துள்ளார்கள் என தந்தையிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நிர்மல் மாடியில் இருந்த பட்டாசுக்கு தீ வைத்தார். பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் நிர்மலுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

    மேலும் மாடியில் சுற்றுச்சுவர் இடிந்த்து விழுந்தது. பட்டாசு வெடிக்கும் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், நகர மன்ற தலைவர் ஹரிணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ×