என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks accident"

    • தீப்பொறி பார்சலில் விழுந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 68). மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் தனது மகன் சக்கரவர்த்தி (40) என்பவருடன் நேற்று முன்தினம் மளிகை கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு தனது மைத்துனர் கோபி (46) என்பவரை தனபால் அழைத்ததாக கூறப்படுகிறது. கோபி மற்றும் கோபியின் மனைவி தீபா (40) ஆகிய இருவரும் கடைக்கு வந்துள்ளனர்.

    அப்போது தாங்கள் வைத்திருந்த பட்டாசு பார்சலை பிரித்துள்ளனர். அந்த நேரத்தில் சக்கரவர்த்தியின் மகன் பிரஜாத் லோபோ (10) சங்கு சக்கர பட்டாசை வெடித்துள்ளான். அந்தப்பட்டாசு தவறி, கோபி பிரித்து வைத்திருந்த பட்டாசு பார்சலில் விழுந்தது.

    இதில் பட்டாசு பார்சல் வெடித்ததில் கோபி அவரது மனைவி தீபா படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடிபகுதியில் கடந்த 25-ந் தேதி பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணாபாடியை சேர்ந்த கோபி (வயது 46) மற்றும் அவரது மனைவி தீபா (40) ஆகியோர் தீக்காயம் அடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு தொடர்பாக ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கோபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    • பட்டாசு விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
    • இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தனியார் கல்லூரி யில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடுகளை கலெக்டர் வெளியிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபு ணர்களை கொண்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் பாது காப்பான உற்பத்தி முறையை கையாளுதல் தொடர்பாக, பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதையடுத்து விருதுநகர் மற்றும் சிவகாசி கோட்டங்க ளில் 28 விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டு, இன்று முதல் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற் சாலைகளில், விபத்தில்லா உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு முகாம்கள், கருத்த ரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

    பட்டாசு உற்பத்தி தொழில் சுமார் 50 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதரத்தில் மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த தொழில் வழங்கி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும். நாட்டின் பல்வேறு வளர்ச்சி, முன்னேற்றங்களுக்கு காரணம் தொழிலாளர்கள் தான். அத்தகைய தொழி லாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    எனவே இந்த கருத்த ரங்கை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு அரசின் மூலம் பட்டாசு விபத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவ டிக்கைகளுக்கும் பட்டாசு தொழிலாளர்கள், உறு துணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் இணை இயக்குநர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேல்முருகன் (விருதுநகர்), ரவிசந்திரன் (சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
    • பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 118-வது ஆண்டு ஜாத்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும் பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடைபெற்றது.

    வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

    இதனை பட்டாசு உரிமையாளர் சாதிக் அலி மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து சாமி ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக காலியான இடத்தில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை ஊழியர் சஞ்சீவி வெடித்தார். அதில் இருந்த பறந்த தீப்பொறி அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசுகள் மீது பட்டது. இதில் கொண்டு வந்திருந்த அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பட்டாசு வெடித்து சிதறியதில், பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி, ஊழியர் சஞ்சீவிக்கு ஆகியோர் உடல் கருகினர். சாதிக் அலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை :

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). பட்டாசு தொழிலாளி.

    கடந்த 7-ந் தேதிதியன்று மாலை வாலாஜாவில் உள்ள பட்டாசு குடோனில் சுரேஷ் மற்றும் ராஜேந்திரன் (36)ஆகிய இருவரும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த னர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பொறி பட்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    பட்டாசு குடோனின் சிமெண்ட் ஷீட் மேற்கூரையும், கொட்டகையும் எரிந்து சாம்பலானது.

    இதில் சுரேஷ்க்கும், ராஜேந்திரனுக்கும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சுரேசை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜேந்திரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம்
    • கலெக்டர் குடும்பத்தினரிடம் வழங்கினார்

    ஆலங்காயம்:

    கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உயிரிழந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் முதல் அமைச்சர் நிவாரண நிதி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த தினேஷ்குமாரின் தயார் தனலட்சுமியிடம் வழங்கினார். அப்போது சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பட்டாசு விபத்தில் உயிரிழந்த 13 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

    பலியான 13 பேரில் வீடுகளுக்கும் நேரில் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தனது சொந்த நிதியில் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார். அப்போது பா.ம.க. மத்திய மாவட்ட செயலாளர் டேனியலும் உடன் இருந்தார். பின்னர் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா நிருபர்களிடம் கூறுகையில், பட்டாசு விபத்தில் உயரி ழந்தவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசு வழங்கிய 3 லட்சம் ரூபாய் நிதி போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் வைப்பு நிதி யாக தமிழக அரசு வழங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை பாது காக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.
    • காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த ராம ரெட்டிபாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5-ம் வார திருவிழாவை நேற்று (சனிக்கிழமை) விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு சாமி ஊர்வலம் நடந்தது.

    அப்போது அங்குள்ள குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.

    சாமி ஊர்வலம் வந்ததும் அங்கிருந்த பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர். அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில்பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அருகில் கூடியிருந்தவர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சூரி, சுரேஷ், பிரபா, பொன்மணி, உள்ளிட்ட 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
    • சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மற்றும் மாநகரத்தில் தற்காலிகமாக அனுமதி பெற்று வைக்கப்படும் பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை சேமிக்கும் கடைகளை போலீசார் மூலம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயம் தகுந்த விசாரணையின் அடிப்ப டையில் அனுமதி அளிக்கப்படும் கடைகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை குவித்திருக்கும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், விபத்துகளை தடுக்கவும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு துகள்களை தீ வைக்க முயன்ற போது விபரீதம்
    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் நரேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார்.

    இந்நிலையில் இவர் நேற்று மதியம் வெடிக்காத பட்டாசு துகள்களை ஒன்று சேர்த்து தீ வைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு துகள்கள் பலமாக வெடித்து முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பட்டாசுகள் நாலாபுரமும் வெடித்து சிதறின.
    • 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    திருப்பதி:

    ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் மொத்த பட்டாசு விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து பட்டாசுகள் வெடித்து சிதற தொடங்கின.

    இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். தீ வேகமாக பரவியதால் கடையில் இருந்த பட்டாசுகள் நாலாபுரமும் வெடித்து சிதறின.

    வான வேடிக்கையை மிஞ்சும் அளவிற்கு அங்கிருந்த பட்டாசுகள் விண்ணில் பறந்து வெடித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டே இருந்தன. இதனால் பட்டாசு கடை அருகில் இருந்த ஒரு ஓட்டல் கட்டிடத்தில் தீ பரவியது.

    அந்த கட்டிடம் முழுவதும் எரிய தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேறினர்.

    கடையின் முன்பு இருந்த கார்கள் பைக்குகளிலும் பட்டாசுகள் விழுந்ததில் தீப்பற்றின. இதில் கடையில் அருகில் இருந்து 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது. பெண் ஒருவர் காயமடைந்தார்.

    யாருமே அருகே செல்ல முடியாத அளவுக்கு பட்டாசுகள் வெடித்து சிதறிக் கொண்டே இருந்தன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அருகில் உள்ள கட்டிடங்களில் தீ பரவாமல் தடுப்பதில் முழு கவனம் செலுத்தினர். பட்டாசு வெடித்துக்கொண்டே இருந்ததால் கடையை அவர்களால் நெருங்க முடியவில்லை.

    பட்டாசுகளின் முழுவதும் வெடித்து சிதறிய பிறகு பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தால் ஐதராபாத் நகர பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் என்னும் தெரியவில்லை. பட்டாசு கடை அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


    • கோவில் திருவிழாவின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் குவிக்கப்பட்டிருந்தது.
    • திடீரென பட்டாசு வெடித்து சிதறியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் பகுதியில் வீரராகவர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமாகும். இதில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அதனை கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசுகள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்து சிதறிய பட்டாசுகளில் இருந்து தெறித்த தீப்பொறிகள் விழுந்தன.

    இதையடுத்து மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தால் கடும் தீப்பிளம்பு ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்களின் மீது தீப்பிடித்தது.

    இதையடுத்து கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்கள் அனைவரும் அலறியடித்தபடி நாலா புறமும் சிதறி ஓடினர். தீ விபத்தில் சிக்காமல் இருப்ப தற்காக ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர்.

    அவர்கள் வெடிவிபத்து நடந்த இடத்தில் உடலில் பலத்த தீக்காயங்களுடன் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். இந்த பயங்கர வெடிவிபத்து குறித்து தகவல றிந்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    மேலும் மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீக்காயமடைந்த பக்தர்களை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். வெடிவிபத்தில் மொத்தம் 154 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.

    அவர்கள் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணங்காடு, நீலேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 10 பேருக்கு மிகவும் அதிக தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

    அவர்கள் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். வெடிவிபத்து நடந்த கோவிலில் சிறிய ரக பட்டாசுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தால் போலீசாரிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என்றும், ஆனால் விதிகளை மீறி அனுமதியில்லாத பெரிய அளவிலான பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் பட்டாசுகள் வெடிக்கும்போது, மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைத்துதான் வெடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் அதனை மீறி பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிவிபத்து நடந்த வீரராகவர் கோவிலில் நேற்று நடந்த விழாவில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்டதும் அவர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது கீழே விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

    மேலும் இந்த வெடி விபத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்திருக்கின்றனர். பாதுகாப்புக்காக கோவிலுக்கு அருகே உள்ள கட்டிடத்தில் நின்றபோது வெடி விபத்து ஏற்பட்டதால் அவர்கள் அதில் சிக்கி விட்டனர். 

    ×