என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple festival"

    • திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது. குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்தார். நேற்று இரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். வாளியில் யூரியா இருந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீர் எடுத்து வைத்ததில் 6 குதிரைகள் தண்ணீரை குடித்துள்ளது. யூரியா தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது.

    திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட குதிரைகளில் 6 குதிரைகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில், கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது.

    எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது.
    • பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து வருகிறது. இந்த விழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு கிராம மக்கள் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட குழுவாகவும் பட்டாசுகள் வாங்கி கோவில் விழாவில் ஆங்காங்கே மக்கள் வெடிப்பார்கள்.

    அந்த வகையில் கஞ்சநாயக்கன்பட்டி பக்கத்து ஊரான கோட்டமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், லோகநாதன் உள்பட 3 பேர் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டிக்கு சென்று பட்டாசுகளை வாங்கியதாக தெரிகிறது. அந்த பட்டாசுகளை ஒரு மூட்டையில் கட்டி மொபட்டில் கஞ்சநாயக்கன்பட்டிக்கு கொண்டு வந்தனர்.

    பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் சாலையோரம் பற்றி எரிந்த தீயில், செல்வராஜ் சென்ற மொபட் பட்டாசுகளுடன் திடீரென நிலைதடுமாறி சாய்ந்து விழுந்தது.

    இதில் மூட்டையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் செல்வராஜ் மற்றும் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் சிதறி பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டுக்கலில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) நிர்வகிக்கும் ஒரு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழாவில் ஆர்.எஸ்.எஸ்.இந்தன் 'கான கீதம்' (பிரார்த்தனை பாடல்) பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'கான மேளா' (இசை கச்சேரி) நிகழ்ச்சியின் போது, தொழில்முறை இசைக் குழுவின் உறுப்பினர்களால் ஆர்எஸ்எஸ் பாடல் இசைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் கொடிகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    இந்நிலையில் கோயில் திருவிழாவின் போது 'ஆர்.எஸ்.எஸ். கானகீதம்' பாடலைப் பாடுவது தீவிரமான கவலைக்குரிய விஷயம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன், அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், கோவில்களில் விதிமீறல் நடந்துள்ளது கவலைக்குரிய விஷயம். இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவசம் போர்டை வலியுறுத்தினார்.

    கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை, கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
    • இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்து கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சி போல் கூரைவேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.

    இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கிடைக்கும் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒருமாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.

    • தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
    • தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டது

    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவனம், நகராட்சி தலைவர் கவிதா சங்கர், நகர திமுக செயலாளர் சங்கர் உள்பட முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    முக்கிய வீதிகளில் தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று மாலை மீண்டும் தேரோட்டம் நடக்கிறது.

    • டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    நேற்று நடந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவிற்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அந்த கும்பல் 20 பவுன் நகைகளை அபேஸ் செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
    • ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சப்பா ளையத்தில் கருப்பண்ணார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின் போது முக்கிய நிகழ்வாக வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இக்கோவில் பரம்பரை தர்ம கர்த்தாவாக கனகராஜ் என்பவர் இருந்து வருகிறார்.

    நீதிமன்றத்தில் அனுமதி

    இந்த நிலையில் இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதையடுத்து வேல் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் வேல் எடுக்க அனுமதி பெற்ற மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வேல் எடுப்பதற்கும், திருவிழா நடத்துவதற்கும் பாதுகாப்பு கோரினர்.

    பேச்சுவார்த்தை

    அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், நீதிமன்ற உத்திரவின் படி மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழா நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழாவை தொடங்கினர். பின்னர் கனகராஜ் தரப்பினரும் தனியாக வேல் எடுத்துக் கொண்டு கருபண்ணார் கோவிலுக்கு சென்றனர்.

    மேலும் கனகராஜ் தரப்பினர் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாரப்பன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கனகராஜ் தரப்பினர் வேலை கோவிலுக்கு வெளியே ஊன்றிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • செல்லத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக குறிப்பிடத்தக்கது, வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவில். இங்கு கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார்.

    மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மனை வழிபடு வோருக்கு பேச்சாற்றல் ஏற்படும். பகைவரால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி பிரச்சினைகள் அகலும் என்பது ஐதீகம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் வருகிற 12-ந் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்குகிறது.

    13-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவர் திருவிழா தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முத்தாய்ப்பாக 20-ந் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    21-ந் தேதி சட்டத்தேரும், 22-ந் தேதி மலர்ச்சப்பரமும் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    • தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
    • இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமார பாளையம், கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர். இதில் ஒரு தரப்பினர் சுவாமியை சப்பரத்தில் வைத்து, குறிப்பிட்ட நபரின் டிராக்டரில் தான் வைக்க வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர் தரப்பினர் மறுத்தனர். பேச்சு வார்த்தை சமரசம் ஏற்படாததால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திருவிழா நடத்த தற்காலிகமாக தடை விதித்து தாசில்தார் உத்தரவிட்டார். இந்த சமாதான கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆர்.ஐ. விஜய். வி.ஏ.ஓ. செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும்.
    • அதன்படி இந்த வருடம் மகாபகவதி அம்மன் கோவில் திரு விழா, கடந்த 23-ந் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடம் மகாபகவதி அம்மன் கோவில் திரு விழா, கடந்த 23-ந்

    தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    24-ந் தேதி காலை நஞ்சை இடையாறு ராஜா சுவாமி கோவிலில் இருந்து மணிவேல் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை சுவாமி வெள்ளாளர் தெரு, வெங்கமேடு, பாலாஜி நகர், காவிரி நகர், நாவல் நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் ஊர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 25-ந் தேதி ஜேடர்பாளையம் ரோடு, மேற்கு வண்ணத்துறை ரோடு, காலேஜ் ரோடு, மகா லட்சுமி நகர், வெங்கமேடு, சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாமி ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    26-ந் தேதி மாலை பக்தர்கள் மற்றும் பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க, அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகாபகவதிஅம்மன் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 27-ந் தேதி மாலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், அதனை தொடர்ந்து ஊர்வலமாக மாவிளக்கை கொண்டு வந்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நடைபெற்றது. நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம் நடைபெற்றது.

    இரவு ஒயிலாட்டமும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

    • படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையில் வந்து வழிபட்டனர்
    • கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி, கடந்த ஒரு மாதமாக பக்தா்கள் விரதம் இருந்து வந்தனா். கோத்தகிரியில் பழமை வாய்ந்த பேரகணியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் நேற்று திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    இந்த விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகா் இன மக்கள் கலந்துகொண்டு ஹெத்தையம்மன் திருவிழாவினை கொண்டாடினா்.

    படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து இசைக்கருவிகள் முழங்க ஆடல், பாடல்களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

    பண்டிகைக்கு வந்த பக்தர்களுக்கு மடியாடா பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்கள் மூலமாக பேரகணிக்கு சென்றதால் கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல, படுகா் இன மக்கள் வாழும் ஜெகதளா, காட்டேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வரும் நாள்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற உள்ளது.

    ×