search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லத்தம்மன் கோவில் திருவிழா
    X

    செல்லத்தம்மன் கோவில் திருவிழா

    • செல்லத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக குறிப்பிடத்தக்கது, வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவில். இங்கு கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார்.

    மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மனை வழிபடு வோருக்கு பேச்சாற்றல் ஏற்படும். பகைவரால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி பிரச்சினைகள் அகலும் என்பது ஐதீகம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் வருகிற 12-ந் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்குகிறது.

    13-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவர் திருவிழா தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முத்தாய்ப்பாக 20-ந் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    21-ந் தேதி சட்டத்தேரும், 22-ந் தேதி மலர்ச்சப்பரமும் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×