search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு வெடித்து கணவன் மனைவி படுகாயம்
    X

    பட்டாசு வெடித்து கணவன் மனைவி படுகாயம்

    • தீப்பொறி பார்சலில் விழுந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 68). மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் தனது மகன் சக்கரவர்த்தி (40) என்பவருடன் நேற்று முன்தினம் மளிகை கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு தனது மைத்துனர் கோபி (46) என்பவரை தனபால் அழைத்ததாக கூறப்படுகிறது. கோபி மற்றும் கோபியின் மனைவி தீபா (40) ஆகிய இருவரும் கடைக்கு வந்துள்ளனர்.

    அப்போது தாங்கள் வைத்திருந்த பட்டாசு பார்சலை பிரித்துள்ளனர். அந்த நேரத்தில் சக்கரவர்த்தியின் மகன் பிரஜாத் லோபோ (10) சங்கு சக்கர பட்டாசை வெடித்துள்ளான். அந்தப்பட்டாசு தவறி, கோபி பிரித்து வைத்திருந்த பட்டாசு பார்சலில் விழுந்தது.

    இதில் பட்டாசு பார்சல் வெடித்ததில் கோபி அவரது மனைவி தீபா படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    Next Story
    ×