என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் 3 பேர் பலி
- படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






