என் மலர்
நீங்கள் தேடியது "வெடி விபத்து"
- அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
- மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில், அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், ஜம்மு காஷ்மீரின் நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத்தனமான கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் இது உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது.
சமீபத்திய செங்கோட்டை பயங்கரவாத தாக்குதை முன்வைத்து, வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
- சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
- பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுது.
அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தற்போது 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
- பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
- இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறின. அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதனை பார்த்த மற்ற தொழிலாளர்கள் வெளியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருவங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் வெடிமருந்து ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்ய வீட்டில் சட்டவிரோதமாக ஒரு டன் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை வைத்திருந்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதை காவல்துறை எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பட்டாசு விபத்தில் சில வீடுகள் தரைமட்டமாகி விட்டன. 20 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அவற்றின் சேத மதிப்பை கணக்கிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எம்போரியோ கிராண்ட் ஓட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
- சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. எம்போரியோ கிராண்ட் ஹோட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சமையலறையில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த ஊழியர்களை மீட்டனர்.
இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி), ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, " நேற்று மாலை ஹோட்டலின் சமையலறை எரிவாயு லைனில் கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீஸ் குழு, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக லோக் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்றார்.
- பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக இன்று காலை டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
- எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை அடுத்த அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.
இவரிடம் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்ட 5 பேர் கிணறு வெட்டும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் ஆலங்குளம் அருகே ராம்நகர்-புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் புதுப்பட்டியை சேர்ந்த பால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் (வயது 21) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே கிணற்றின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்த சக தொழிலாளிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவல் அறிந்து ஆலங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆசீர் சாம்சன் உள்பட 2 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
- 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் என்பவருக்கு சொந்தமான இடம் புதுப்பட்டி-ராம்நகர் சாலையில் உள்ளது.
அங்கு கிணறு அமைக்க காளாத்திமடத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி நடந்து வந்தது. நேற்று சக்திவேல் மற்றும் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 22), ராஜலிங்கம் (56), அவரது மகன் மாரிச்செல்வம் (26), ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்த ஆசீர் சாலமோன் (27) ஆகிய 4 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.
பாறைகளை தகர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட டெட்டனேட்டர் எனப்படும் வெடிப்பொருட்களை சோதனை செய்தபோது, அவை திடீரென வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலிங்கம், ஆசீர் சாலமோன் ஆகியோர் சிகிச்சைக்கு சென்ற வழியில் இறந்தனர். மாரிச்செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடியை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அஜாக்கிரதையாக கையாண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 286, 304(2), 9-பி, 1-பி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அதேநேரத்தில் கிணறு தோண்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 84 டெட்டனேட்டர்களும், 86 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்க செய்வதற்காக மதுரையில் இருந்து குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் இன்ஸ்பெக்டர் சிங்கம் மேற்பார்வையில் கிணற்றுக்குள் வைத்து வெடிக்காமல் உள்ள 3 டெட்டனேட்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர்.
- பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (வயது 50). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நாட்டு வெடி, வாணவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர், புதுவை மாநில கடற்கரையோரங்களில் மாசிமக திருவிழா இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்த மாசிமகத்தில் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும். இரவு தெப்ப உற்சவமும் நடக்கும். அப்போது நாட்டு வெடி, வாணவெடிகள் வெடிப்பது வழக்கம்.
இந்த திருவிழாவுக்காக நாட்டு வெடிகளை ஆர்டரின் பேரில், அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தயார் செய்து வந்தனர். அதன்படி நேற்றும் பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மாலை 4.15 மணி அளவில் திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்ததால் குடோன் தரைமட்டமானது. இருப்பினும் வெடிகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் இருந்தது. குடோனும் பற்றி எரிந்தது.
வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் குடோன் இருந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததோடு, அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். சிலர் பட்டாசு வெடித்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
பின்னர் இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் மனைவி மல்லிகா (60) சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
அரியாங்குப்பம் மதன் மனைவி மேகலா (34), காசான் திட்டு ராஜ்குமார் மனைவி மலர்கொடி (35), சிவனார்புரம் சங்கர் மகன் சக்திதாசன் (25), பட்டாசு குடோன் உரிமையாளர் கோசலை, புதுவை அரியாங்குப்பம் ஓடெவளியை சேர்ந்த அய்யனார் மனைவி சுமதி (39), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி (35), பாக்கம் கூட்டு ரோடு ராஜேந்திரன் மனைவி அம்பிகா (18), காசான்திட்டு செல்வம் மகள் செவ்வந்தி (19), லட்சுமி (25) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மலர் கொடி, சக்திதாசன், மேகலா, கோசலை ஆகிய 4 பேரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கடலூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது வருகிற 31-ந் தேதி வரை அனுமதி பெற்றிருப்பது தெரிய வந்தது.
பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






