என் மலர்
நீங்கள் தேடியது "எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்"
- இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
- இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.
ரஷியாவின் ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.
நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் டிரோன் மூலம் தாக்கப்பட்டது. இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ரோஸ்டோவ் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநர் யூரி ஸ்லியுசர், சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.
ரஷியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து நோவோகுய்பிஷெவ்ஸ்க், சிஸ்ரான், ரியாசான் மற்றும் வோல்கோகிராட் உள்ளிட்ட பல ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
- இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங், இயக்குனர் ராமகோபால், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர்(செயல்பாடு) ஜி.அரவிந்தன், இயக்குனர்(பொறியியல்) யு.வெங்கட்ரமணா உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த ஆண்டை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வருவாயை விட 9 சதவீதம் அதிகரித்து 44,188 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. மேலும் பெட்ரோல் உற்பத்தியில், கடந்த ஆண்டை விட 2 மெட்ரிக் டன் அதிகரித்து 1,107 மெட்ரிக் டன் பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, டீசல் உற்பத்தியில் கடந்த ஆண்டை விட 230 மெட்ரிக் டன் அதிகரித்து 4,412 மெட்ரிக் டன் டீசல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, நாகப்பட்டினத்தில் புதிதாக 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் வகையிலான புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட அனுமதி கிடைத்துள்ளது.
இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது 2019 மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெறும். இந்த திட்டம் நிறைவடையும் போது தமிழகத்தின் எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் அது முக்கிய பங்கு வகிக்கும்.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தான் தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மாற்றம் இல்லாமல் இருப்பதற்கும் கர்நாடக தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர்(செயல்பாடு) ஜி.அரவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் எரிபொருள் தேவை 2025-ல் 20 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். தற்போது சென்னையில் மாசு அதிகமாக இருப்பதால் 10 மில்லியன் டன்னுக்கு மேல் பெட்ரோலிய உற்பத்தியை விரிவாக்கம் செய்ய முடியாது. நாகப்பட்டினத்தில் 20 வருடமாக 0.5 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியம் உற்பத்தி செய்து வருகிறோம். இதை வைத்து, தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், அரியலூர், மதுரை வரை வினியோகித்து வருகிறோம்.
தற்போது அங்கு இருக்கும் கட்டமைப்பு, 4-வது உற்பத்தி தர பெட்ரோலிய பொருட்களை தயாரிப்பதற்கு கூட பயன்படாத நிலையில் உள்ளது. எனவே அதனை மாற்றிவிட்டு, அதற்கு பதில் அதே நிலத்தில் 6-வது உற்பத்தி தரத்தில் 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்க போகிறோம்.
இதற்கான கச்சா எண்ணெய் காரைக்கால் துறைமுகம் வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் ஏற்கனவே இருக்கும் பைப் லைனை பெரியதாக மாற்றம் செய்து கொண்டு வரப்படும். இதனால், எந்தவித சுற்றுப்புற மாசும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.#IndianOilCompany






