search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oil Refinery"

    • பொதுத்துறை நிறுவனமான (சி.பி.சி.எல்) சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை வாங்கவும் விற்கவும் உள்ள தடைகளை நீக்கி பத்திர பதிவுகள் செய்யும் வகையில் உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் பனங்குடி இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான (சி.பி.சி.எல்) சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் திருமணம் மற்றும் உயிரிழப்பு போன்ற நேரங்களில் தங்களது சொத்துக்களை அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியாத சூழல் நிலவுவதால் நாகூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை வாங்கவும் விற்கவும் உள்ள தடைகளை நீக்கி பத்திர பதிவுகள் செய்யும் வகையில் உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து பலர் கொண்டனர்.

    ×