என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Explosion Accident"

    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
    • ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (50 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (50 வயது) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி (37 வயது), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (29 வயது), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் ராம் (28 வயது) மற்றும் ரமேஷ் (20 வயது) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
    • இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

    இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

    மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
    • 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் என்பவருக்கு சொந்தமான இடம் புதுப்பட்டி-ராம்நகர் சாலையில் உள்ளது.

    அங்கு கிணறு அமைக்க காளாத்திமடத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி நடந்து வந்தது. நேற்று சக்திவேல் மற்றும் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 22), ராஜலிங்கம் (56), அவரது மகன் மாரிச்செல்வம் (26), ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்த ஆசீர் சாலமோன் (27) ஆகிய 4 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

    பாறைகளை தகர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட டெட்டனேட்டர் எனப்படும் வெடிப்பொருட்களை சோதனை செய்தபோது, அவை திடீரென வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலிங்கம், ஆசீர் சாலமோன் ஆகியோர் சிகிச்சைக்கு சென்ற வழியில் இறந்தனர். மாரிச்செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த வெடிவிபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடியை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அஜாக்கிரதையாக கையாண்டது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 286, 304(2), 9-பி, 1-பி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    அதேநேரத்தில் கிணறு தோண்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 84 டெட்டனேட்டர்களும், 86 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.

    தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்க செய்வதற்காக மதுரையில் இருந்து குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் இன்ஸ்பெக்டர் சிங்கம் மேற்பார்வையில் கிணற்றுக்குள் வைத்து வெடிக்காமல் உள்ள 3 டெட்டனேட்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    • 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்
    • ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.

    ஆப்பிரிக்காவின் வடக்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து எரிபொருளைக் கொட்டி வெடித்துச் சிதறியதில் 70 பேர் உயிரிழந்தனர். 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்

    நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதிக்கு அருகே நேற்று [சனிக்கிழமை] அதிகாலையில் டேங்கரில் இருந்து மற்றொரு டிரக்கிற்கு ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.

    இது பெட்ரோலைக் கையாளுபவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மரணத்திற்கும் வழிவகுத்தது என தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்தின் (NEMA) பிரதிநிதி ஹுசைனி இசா தெரிவித்தார்.

    காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று NEMA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×