என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நைஜீரியா"

    • நைஜீரியாவில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் 100 பேர் கடத்தப்பட்டனர்.
    • ஒரே வாரத்தில் மாணவர்கள் கடத்தப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியது.

    இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.

    அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.

    ஒரே வாரத்தில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அதிபர் போலா டினுபு அறிவித்துள்ளார்.

    • நைஜீரியா அரசுக்கு அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்படும்
    • நைஜீரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், நைஜீரியா அரசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கிறிஸ்தவர்களை கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், உதவிகள் நிறுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • பெட்ரோல் கசிந்து வெளியேறியபோது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது.

    நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

    இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான மோதல்களால் 500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்
    • இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களாகும்.

    மத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள யெலேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிசூடு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த தாக்குதலில் பலரைக் காணவில்லை, மேலும் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்கள் விவசாயிகளை குறிவைத்ததாகத் தெரிகிறது. இதனால் விவசாய சமூகங்கள் இடம்பெயர்ந்து அப்பகுதியின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படலாம்.

    பென்யூ மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான மோதல்களால் 500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவை பெரும்பாலும் இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களாகும்.

    கடந்த மாதம், பென்யூவில் 42 பேர் மேய்ச்சல்காரர்களால் கொல்லப்பட்டனர். இந்த மோதல்களால் நைஜீரியாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    • பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
    • படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்தும் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

    15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அட்டூழியம் செய்து வரும் இந்த பயங்கரவாத அமைப்பினர் இதுவரை ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை அவர்களது வீடுகளில் இருந்து விரட்டியடித்து உள்ளனர்.

    எனவே பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் போர்னோ மாகாணம் மைராரி பஸ் நிலையத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர். அங்கு பஸ் வந்ததும் பயணிகள் பலர் அதில் ஏற முயன்றனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நைஜீரியாவின் மோசமான சாலைகளினால் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
    • கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் சாலை விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர்

    நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது.

    இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நைஜீரியாவின் மோசமான சாலைகளினாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக வாகனம் ஓட்டுவதாலும் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில் அணை உடைந்து நீர் புகுந்தது.
    • ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமானது.

    பல வீடுகள் நீரில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்தனர் என நைஜர் அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    • கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில், அணை உடைந்து நீர் புகுந்தது.
    • ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

    நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால், நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று பலமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    • பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.
    • நைஜீரியா அதிபர் போலா டினுபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த  கும்பல் ஒன்று ஜைகே (ZIKE) எனப்படும் கிறிஸ்தவ விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது.

    இதில் 40 பேர் பலியானார்கள். மேலும் பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர்.

    இதுதொடர்பாக நைஜீரியா அதிபர் போலா டினுபு கூறும்போது, இந்த நெருக்கடியை முழுமையாக விசாரித்து, வன்முறைச் செயல்களைத் திட்டமிட்டதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறு வனங்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

    கிறிஸ்தவ சமூகத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மேய்ப்பர்கள் என நம்பப்படும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆயுதமேந்தியவர்கள் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி இவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

     

    • இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
    • போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பிளேட்டு:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும்,அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது.

    அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும், தாக்கப்பட்டதிலும் அடுத்தடுத்து பலர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதில் பலர் இறந்தனர்.இதனால் கடந்த 3 நாட்களில் இந்த மோதலுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 85- ஆக உயர்ந்து உள்ளது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்க அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலீசாரை பார்த்ததும் வன்முறை கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    • டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.
    • பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கூறுகையில், "

    நேற்று முன்தினம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் டேங்கர் சாலையை விட்டு விலகி ஒன்டோவின் ஓடிக்போ மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

    இதைதொடர்ந்து, டேங்கரில் இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடித்து சிதறியுள்ளது. நபர்களில் ஒருவர் செல்போன் வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.

    இந்த விபத்தில், டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.

    பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது
    • என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்

    நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது போர்னோ நகரம். பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது.

    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

    "நேற்று காலை அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் வந்தார்கள். வயல் வேலையில் இருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்தார்கள். பிறகு அவர்களை கொன்றார்கள். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்" என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறினார்.

    இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். (Islamic State of West Africa) எனும் அமைப்பும் அந்நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    ×