என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISIS terrorists kill"

    • பலமுறை கண்டித்தும் அவர்கள் திருந்தாததால் அமெரிக்கா தற்போது தாக்குதல் தொடுத்து உள்ளது.
    • கிறிஸ்துவர்களை படுகொலை செய்யப்படுவது தொடர்ந்தால் மேலும் தாக்குதல் நடத்தப்படும்.

    கிறிஸ்துமஸ் அன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், கடந்த நூறு ஆண்டுகளாக நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை பலமுறை கண்டித்தும் அவர்கள் திருந்தாததால் அமெரிக்கா தற்போது தாக்குதல் தொடுத்து உள்ளது.

    கிறிஸ்துவர்களை குறித்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களை படுகொலை செய்யப்படுவது தொடர்ந்தால் மேலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஒருபுறம் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.அங்கு ஈராக் எல்லையில் டெயிர் அல் ஜோர் நகரையொட்டிய பகுதிகளில் 4 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

    சிரிய ஜனநாயக படையினருடன் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்றும், சனிக்கிழமையன்றும் சிரிய ஜனநாயக படையினருக்கும், குர்து இன போராளிகளுக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
    ×