search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivakasi protest"

    • சிவகாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் இன மக்களின் கலவரத்தை தூண்டிவிட்டு இரண்டு இன மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கும் வகையிலும் சிறுபான்மை சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் இரக்கமின்றி இருக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும்

    மற்றும் நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்து ரைக்கு நடந்த சாதிவெறி தாக்குதல் இது போன்ற செயல்கள் இனிமேல் எங்கும் நடைபெற கூடாது என்று வலியுறுத்தி விடுத லைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் ஜே.கே.செல்வின் ஏசுதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல துணைச் செய லாளர் வல்லரசு முன்னிலை யில், மாநில துணைச் செயலாளர் நவமணி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் செல்வகுமார், மகளிர் அணி மகளிர் அணி துணைச் செயலாளர் லூர் தம்மாள், நகரச் செயலா ளர் கள் தமிழரசி, செல்வ மீனா,

    மாவட்ட அமைப்பா ளர்கள் அசோக்குமார், லில்லி ராஜன், தமிழ்ச்செல் வன், பைக் பாண்டி, சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் தேவா நகரத் துணைச் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி சாமுவேல், சாமுராய்அமீர், மணி, அகஸ்தியன், குட்டி வளவன், ஆகாஷ், வெளிச்சம், பாண்டி மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    சிவகாசி:

    இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன் காரணமாக பட்டாசு விற்பனை பெருமளவில் சரிந்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பட்டாசு தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


    இதன்காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

    பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும் இன்று (21-ந்தேதி) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது.

    மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    ×