search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "party"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

     

    நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

     

     

     

    இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
    • மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை தவிர மேலும் 4 மாநி லங்களிலும் போட்டியிடுகிறது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 4 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

    கேரளாவில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆந்திராவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
    • தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.

    தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.


    தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
    • தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் தொண்டர்களி டம் நிதி திரட்டப்படுகிறது. நிதி வசூலில் சில மாநிலங்களில் மந்தமான நிலையே உள்ளது.

    காங்கிரசின் வயதை குறிக்கும் ரூ.138, ரூ.338, ரூ.1338 என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் ரூ.138 மட்டுமே கட்டி இருக்கிறார்கள்.

    இந்நிலையில் நேற்று டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்கு நிதி திரட்டுவது மற்றும் ராகுல்காந்தி தொடங்கவிருக்கும் ஒற்றுமை யாத்திரை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நிதி செலுத்த வேண்டும்.

    அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனு செய்பவர்களும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ஆன்லைனில் செலுத்தி அதற்கான அத்தாட்சி ரசீதையும் இணைத்து மனு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதி செய்தார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் தனியாக கூட்டம் நடந்தது.

    நாடு முழுவதும் தொகுதிப் பங்கீடு மற்றும் சுமூகமான முடிவுகளுக்காக கூட்டணி கட்சிகளை அணுகி வருவதாக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும் என்றார்.

    • சிவகாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் இன மக்களின் கலவரத்தை தூண்டிவிட்டு இரண்டு இன மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கும் வகையிலும் சிறுபான்மை சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் இரக்கமின்றி இருக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும்

    மற்றும் நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்து ரைக்கு நடந்த சாதிவெறி தாக்குதல் இது போன்ற செயல்கள் இனிமேல் எங்கும் நடைபெற கூடாது என்று வலியுறுத்தி விடுத லைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் ஜே.கே.செல்வின் ஏசுதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல துணைச் செய லாளர் வல்லரசு முன்னிலை யில், மாநில துணைச் செயலாளர் நவமணி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் செல்வகுமார், மகளிர் அணி மகளிர் அணி துணைச் செயலாளர் லூர் தம்மாள், நகரச் செயலா ளர் கள் தமிழரசி, செல்வ மீனா,

    மாவட்ட அமைப்பா ளர்கள் அசோக்குமார், லில்லி ராஜன், தமிழ்ச்செல் வன், பைக் பாண்டி, சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் தேவா நகரத் துணைச் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி சாமுவேல், சாமுராய்அமீர், மணி, அகஸ்தியன், குட்டி வளவன், ஆகாஷ், வெளிச்சம், பாண்டி மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.

    • அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சேலம்:

    அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஐசக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஐசக் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண் கள் நிர்வாணப்ப டுத்தி கொடுமைப்ப டுத்தப்படு கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எடுக்கப்பட்டுள் ளன. பாதிரியார்கள் தாக்கப்பட் டுள்ளனர்.இதற்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும்.

    இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவ டிக்கை இல்லை. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய அரசில் மாற்றம் தேவை. தமிழக அரசு சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பாக உள்ளது. தமிழ கத்தில் தி.மு.க.வுக்கும், தேசிய அளவில் காங்கிரசுக்கும் எப்போ தும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மண்டல பேராயர் ஹெரால்டு டி.டேவிட், கிழக்கு மாவட்ட பேராயர் ஜோசப் மோகன்,மேற்கு மண்டல பேராயர் டேனியல், வடக்கு மண்டல பேராயர் டேவிட் குட்டி,கிழக்கு மண்டல பேராயர் பர்ண பாஸ், நாமக்கல் மாவட்ட பேராயர் சாமுவேல், முதன்மை பொது செயலா ளர் சரவணன், சேலம் மாவட்ட செயலாளர் ஜான் ஐசக் ,சேலம் மாவட்ட தலை வர் ராமு செல்வராஜ்,சேலம் மாவட்ட பொருளாளர் பீட்டர், மேற்கு தொகுதி செயலாளர் மார்டின் செந்தில் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    • சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர்சங்கர் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறிவிருந்து நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய கிடாய்கள் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொன்னர்சங்கர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் முன்பு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட படையல் கறி விருந்து விமர்சையாக நடைபெற்றது.

    இந்த திருவிழாவில் புதுப்பட்டி, புதூர், நடுவனூர், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கிடாய் வெட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி
    • பல்வேறு ஊர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஸ்ரீ ராமலு முரளி முன்னிலை வகித்தார்.

    இதில் ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன், வெண்ணந்தூர் வட்டாரத் தலைவர் சொக்கலிங்க மூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாமகிரிப்பேட்டை இளங்கோ, பிள்ளாநல்லூர் சண்முகசுந்தரம், வெண்ணந்தூர் சிங்காரம், அத்தனூர் பூபதி, நகராட்சி கவுன்சிலர் லலிதா பாலு, குருசாமிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோபால், மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மகேஸ்வரி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், ராசிபுரம் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம், பழனிசாமி, மதுரை வீரன், கோவிந்தராஜ், ஜெயபால் ராஜ், சேக் உசேன் பலர் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்

    இதேபோல் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொத்தனூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், காந்தி, மாவட்ட பொருளாளர்கள் மணி, குப்புசாமி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் மோகனூர் வட்டார தலைவர்கள் நடராஜன், முத்துசாமி, குப்புசாமி, பரமத்தி வட்டாரத் தலைவர் சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஓமலூர்

    சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மற்றும் மணிப்பூர் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் மூத்த நிர்வாகி மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகு தீபம் ஏந்தி மத்திய பா.ஜ.க. அரசையும், மணிப்பூர் பா.ஜ.க அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து 1 மணி நேரமாக மெழுகு தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    • பொது சிவில் சட்டத்தை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.

    மதுரை

    நாட்டின் பன்முக தன் மையை சீர் குலைக்கும் விதமாக பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளதாக கூறியும், அதனை கண்டித் தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் கட்சி–யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகு–மான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தொகுப்புரை வழங்கினார். மதுரை முஸ் லிம் ஐக்கிய ஜமாத் செயலா–ளர் நிஸ்தார் அஹ்மத், பொருளாளர் அப்துல் காதர், முன்னாள் தலைவர் நஜ்முதீன், ஜமாஅத்துல் உலமா மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் மன்பஈ,

    மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், சோகோ அறக்கட்டளை பொறுப்பா–ளர் வழக்கறிஞர் செல்வ கோமதி மற்றும் அனைத்து கட்சி, இயக்க, ஜமாஅத் நிர்வாகிகள், உலாமா பெரு–மக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன் னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமி–நாதன், அகில இந்திய பார் வர்டு பிளாக் தேசிய துணைத் தலைவரும், முன் னாள் எம்.எல்.ஏ.வு–மான பி.வி.கதிரவன், சி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராஜன்,

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபிக் அஹ்மது, திருவடி குடில் சுவாமிகள், தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேரறிவாளன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாஹ் கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இறுதியாக மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.

    • சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.

    நங்கவள்ளி:

    சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் பழனி தலைமை தாங்கினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து, சி.ஐ.டி.யூ. சேலம் மாவட்ட நிர்வாகி திருப்பதி, மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.

    சேலத்தில் பெரியசாமியை தாக்கியவர்களை கண்டித் தும், அவர்களை கைது செய்ய கோரியும் கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    • ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார்.
    • நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியில் ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார். இந்த நிலையில் அவரை கவுரவப்படுத்துவது என்று ஊட்டி 7 வது வார்டு நகரமன்ற உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான விசாலாட்சி விஜயகுமார் முடிவு செய்தார்.

    எனவே அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தூய்மைப்பணியாளர் ராஜேந்திரனை வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு சால்வை அணித்து, மதியஉணவு விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×