search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crocodile farm"

    • 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • முதலைப்பண்ணை புதுபொலிவு பெற்றவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணை உள்ளது.இந்தப் பண்ணையில் 22 ஆண் முதலைகள் உட்பட 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அப்போது விலங்குகளின் மார்பளவு சிலைகள், ஊஞ்சல், சருக்கு விளையாட்டு, சுவற்றில் முதலைகளின் ஓவியம், புல்தரை, வனவிலங்குகளின் சிலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதனால் முதலைப்பண்ணை புதுபொலிவு பெற்றவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று அமராவதிஅணை பகுதியில் சுற்றுலாபயணிகள் திரண்டனர். பின்னர் அணைப்பகுதி, ஒன்பது கண் மதகுகள் முன்பு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து முதலைப்பண்ணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் முதலைகளை பார்த்து ரசித்தனர். புதிதாக பிறந்துள்ள முதலை குட்டிகள் அங்கும் இங்கும் ஓடிப் பிடித்து விளையாடியது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதையடுத்து அங்குள்ள வனவிலங்குகளின் சிலைக்கு முன்பு புகைப்படம் எடுத்ததுடன் ஊஞ்சல்,சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதி, ராக் கார்டன், முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் இயற்கை சூழலை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.

    இதே போன்று திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.இதனால் அனைவரும் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை தரிசனம் விட்டு திரும்பி சென்றனர். இதனால் திருமூர்த்தி அணை அங்கிருந்து அருவி கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    • 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
    • முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் 13 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 7 முதலை குட்டிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் பிறந்தவை ஆகும்.

    இந்த 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதையொட்டி முதலைகைள பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து விருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து கிண்டி பூங்கா அதிகாரி அறிவழகன் கூறும்போது, கடந்த 1993-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 6 முதலகைள் கொண்டு விடப்பட்டது. ஆனால் அவை எதிர்பார்த்த இன பெருக்கம் செய்யவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் 24 முட்டைகளில் இருந்து முதலைக்குட்டிகள் பொறித்தன. இதில் பலவீனமாக இருந்த முதலைக்குட்டிகள் ஒவ்வொன்றாக இறந்தன. தற்போது 7 முதலைக் குட்டிகள் உள்ளன. இதன் 3-வது பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடினோம். முதலைகளுக்கு மீன்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு முதலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×