search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேளூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
    X

    சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பெண்கள்.

    பேளூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

    • வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாழப்பாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.

    வாழப்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, பேளூர் நகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி , வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    சிங்கிபுரம் ராம்கோ நிறுவன பணியாளர்கள் மணிவேல், முனியசாமி, வடிவேல், துளி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், உதயா அறக்கட்டளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர், 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கினர்.

    Next Story
    ×