என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பேளூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
- வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
- 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாழப்பாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.
வாழப்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, பேளூர் நகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி , வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சிங்கிபுரம் ராம்கோ நிறுவன பணியாளர்கள் மணிவேல், முனியசாமி, வடிவேல், துளி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், உதயா அறக்கட்டளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர், 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்