search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்    விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
    X

    கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

    • தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்தது.
    • அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்



    கடலூர்:

    புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூர் அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் அமைப்பு செயலாளர் திருமார்பன், மாவட்ட செயலாளர் மருதமுத்து, மாவட்ட துணை செயலாளர் திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பழனிவேல்,கிட்டு, ஸ்ரீதர், ஜவகர், சுபாஷ், பாலமுருகன், ராமச்சந்திரன், கலைஞர், வெங்கடசாமி, புலிக்கொடியன், திருமாறன், காட்டுராஜா, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×