search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணியில் இருந்து ஓய்வுபெற்ற தூய்மை பணியாளருக்கு விருந்து
    X

    பணியில் இருந்து ஓய்வுபெற்ற தூய்மை பணியாளருக்கு விருந்து

    • ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார்.
    • நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியில் ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார். இந்த நிலையில் அவரை கவுரவப்படுத்துவது என்று ஊட்டி 7 வது வார்டு நகரமன்ற உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான விசாலாட்சி விஜயகுமார் முடிவு செய்தார்.

    எனவே அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தூய்மைப்பணியாளர் ராஜேந்திரனை வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு சால்வை அணித்து, மதியஉணவு விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×