என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
சைபர் கிரைம் மோசடி தொடர்பாக ரூ. 32.50 லட்சத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
- பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.
- மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.அவ்வகையில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ஜன்னத் என்பவர் 32 லட்சம் ரூபாய், ஊத்துக்குளியை சேர்ந்த பாலாஜி என்பவர் டிரேடிங்கில் 36 ஆயிரத்து 500 ரூபாய், பல்லடத்தை சேர்ந்த மோகன் என்பவர் விளம்பரத்தை பார்த்து பணம் செலுத்தி 7 ஆயிரத்து 999 ரூபாய் மற்றும் இணையவழி வேலைவாய்ப்பில் உடுமலையை சேர்ந்த விசாலி என்பவர் 5 ஆயிரத்து 100 ரூபாய் இழந்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 4 வழக்குகளில் மொபைல் போன் எண்களை கண்டறிந்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story