search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi Police"

    • தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
    • இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செண்பகப்பிரியா மற்றும் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதில் தொலைந்த மற்றும் திருடுபோன ரூ.7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் தென்காசியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார்.

    மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

    பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரி வித்தார்.

    செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட போலீசாருக்கு தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.

    தென்காசி மாவட்ட போலீசாருக்கு சைபர் கிரைம் புகார்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
    வீ. கே. புதூர்:

    தமிழக காவல் துறையில் புதிதாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக அந்தந்த தலைமையகத்தில் செயல்பட்டு வரும் சைபர் காவல் நிலையம் வந்து புகார் அளிக்கின்றனர்.

    பொது மக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை தங்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களில்  உடனுக்குடன் அளிக்கும்  வகையிலும், நீண்ட தூர பயணம் செய்து தலைமையகத்தில் புகார் அளிப்பதை   தவிர்க்கவும்,பொது மக்களுக்கு உதவியாக அனைத்து காவல் நிலையங்களிலும் புதிதாக சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ் நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

    அதன்பேரிலும்,  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்  அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் உட்பட 3 சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ்களுக்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி  தலைமையில், பொது மக்களிடம் சைபர் கிரைம் புகார்களை பெற்று உடனடியாக ஆன்லைனில் புகாரை அளி ப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    மேலும் சைபர் கிரைம் குற்ற ங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறை யினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
    ×