என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 141588"

    • ஈரோட்டில் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் மிளகாவை மொத்த விலையில் வாங்குவதற்காக இணையதளம் உதவியை நாடியுள்ளார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த போன் நம்பருக்கு அந்த பெண் வியாபாரி போன் செய்துள்ளார்.

    அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் நிறுவனம் குஜராத்தில் உள்ளது என்றும் மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் வியாபாரி அவர்கள் கூறியபடி ஆயிரம் கிலோ பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் முன் தொகையாக ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-யை செலுத்தியுள்ளார்.

    அதன் பின்னர் அவர்கள் கூறியபடி அந்த பெண் வியாபாரிக்கு அவர்கள் பொருட்களை அனுப்பவில்லை.

    இது குறித்து அந்த பெண் வியாபாரிகள் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் - ஆப் என்று வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கை முதலில் முடக்கினர்.

    அதன் பின்னர் அவர் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தனர். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து மோசடியில் அவர் இழந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 பணத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த பெண் வியாபாரி நன்றி கூறி சென்றார்.

    • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
    • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

    எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

    அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

    இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

    எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • ஆன்லைன் மோசடியில் பெண் ரூ.9 லட்சத்தை இழந்தார்
    • அதிர்ஷ்டம் அடித்ததாக நம்ப வைத்து

    திருச்சி:

    திருச்சி தென்னூர் ஓதமினார் மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் அகமது ஷெரீப். இவரது மகள் அனிஷா அமல். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் கோன் பனேகா குரோர்பதி நிறுவனத்திலிருந்து பேசுகிறோம்.

    உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ. 35 லட்சம் மற்றும் பி எம் டபிள்யூ கார் பரிசாக விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு ரூ. 9 லட்சத்து 39 ஆயிரத்து 500 பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அனுஷா அம்மாள் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு ரூ. 9 லட்சத்து 39,500 செலுத்தியுள்ளார்.

    ஆனால் பல மாதங்கள் ஆன பின்னரும் பரிசுத்தொகை அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனுஷா அமல் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிந்துமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாடிக்கையாளரிடம் 37 பவுன் நகை- ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • வியாபாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் விருதுநகர் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கடந்த 2 வருடமாக சென்று வந்தார்.

    இதில் கடை உரிமையா ளர் மண்டலே உத்தம் ஜோதி ராம், அவரது மனைவி அஸ்வினி, மாமனார் யஷ்வந்த் ஆகியோர் பழக்கமாகினர்.

    இந்த நிலையில் முத்துக்குமார் தனக்கு சொந்த மான நகைகளை அடகு கடையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரிடம் நகைக்கடை உரிமையாளர் மண்டலே உத்தம் ஜோதிராம் நகைகளை என்னிடம் கொடுங்கள், வட்டி வேண்டாம் என்று கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து முத்துக்குமார் கடந்த 2021ம் ஆண்டு 37 பவுன் நகைகளை மண்டலே உத்தம் ஜோதிராமிடம் கொடுத்துள்ளார். மேலும் நகையை மீட்பதற்கு ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் நகை-பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதுபற்றி முத்துக்குமார் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மண்டலே உத்தம் ஜோதி ராம், அஸ்வினி, யஷ்வந்த் ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் இதேபோல் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
    • தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரும் அரசு வேலைக்காக தலா ரூ.3 லட்சம் வீதம் வரதராஜன் மூலம் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் வெங்காயபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 47). இவர் அரசு வேலைக்காக கடந்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சமயபுரத்தை அடுத்த கூத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ சண்முகவேல் (65) என்பவர் வரதராஜனிடம் சமயபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தார்.

    இதையடுத்து இவர் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வரதராஜனும் அவரை முழுமையாக நம்பினார். பின்னர் ஆசிரியர் பணிக்காக 2017-ம் ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் பணத்தை ராஜ சண்முகவேரிடம் கொடுத்திருந்தார்.

    மேலும் தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரும் அரசு வேலைக்காக தலா ரூ.3 லட்சம் வீதம் வரதராஜன் மூலம் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் வெகு காலம் ஆகியும் மேற்கண்ட 3 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பின்னர் ஒவ்வொரு முறையும் பணத்தை திருப்பி கேட்கும் போது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து தப்பித்து வந்தார். இதனால் நம்பிக்கை இழந்த வரதராஜன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது ராஜ சண்முகவேல் பணம் தர மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வரதராஜன் தொட்டியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி முன்னாள் கோவில் அறங்காவலர் ராஜ சண்முகவேல் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
    • வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பகுதியில் ரகுமான் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் ரகுமானிடம் வெளிநாடு வேலை செல்வதற்கு பணம் கொடுத்து இதுவரை விசா வராமல் ஏமாற்றம் அடைந்ததாக 40-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுக்க சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர்.

    இதில் குத்தாலம் பகுதியை சேர்ந்த ராஜதுரை, கும்பகோணம் பகுதி யாசர், திருப்பத்தூர் பகுதி மணிமொழி, மற்றும் தைக்கால், கூத்தியம்–பேட்டை, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்ததற்கான புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர்.

    இது குறித்த பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ரகுமான் ஒவ்வொருவரிடமும் 1 லட்சம், 90 ஆயிரம், 1 லட்சத்து 20 ஆயிரம் என வெளிநாடு வேலைக்கு தகுந்தாற்போல் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.

    மேலும் வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

    காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டு தர வேண்டும் என்றனர்.

    • மார்த்தாண்டம் அருகே ஏஜெண்டு வீட்டு முன்பு போராட்டம்
    • சென்னை தம்பதி உள்பட 3 பேர் மீது புகார் கூறப்பட்டதால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டு ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்பு 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக பணம் கொடுத்தவர்கள் என்பதும் தற்ேபாது ஏமாந்து நிற்பதால் ஏஜெண்டு வீட்டு முன்பு திரண்டதாகவும் கூறினர்.

    மேலும் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    சென்னை மண்ணடி பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் பெண் மற்றும் அவரது கணவர், குமரி மாவட்ட ஏஜெண்டு ஆகியோர், கடந்த 2020-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் கார்டன் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது என்றும் அதற்காக ஒரு ஆளுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதனை நம்பி தமிழக-கேரள எல்லை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை கொடுத்து உள்ளனர்.

    அதனை பெற்றுக் கொண்ட டிராவல்ஸ் நிறுவன பெண், விரைவில் விசா மற்றும் டிக்கெட் அனுப்பி தரப்படும் என்று கூறினார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் அளிக்க வில்லை. இதனையடுத்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது, நியூசிலாந்து நாட்டில் தற்போது ஆட்கள் தேவை இல்லை, அதே வேலை அமெரிக்க நாட்டில் உள்ளது. அதற்கான விசா தங்களிடம் கைவசம் உள்ளது. அதற்கு கூடுதலாக பணம் செலவாகும் என்றும் உடனே பணத்தை செலுத்தி மருத்துவ சான்று எடுத்தால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா செல்லலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

    இதனை நம்பியவர்கள் உடனடியாக பணத்தை செலுத்தி மருத்துவ சான்று எடுத்துள்ளனர். இதனை யடுத்து மீண்டும் ரூ. 50 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக டிக்கெட் கிடைத்து நீங்கள் அமெரிக்கா செல்லாம் என்று கூற, அதனையும் நம்பி பணத்தை கொடுத்து விட்டு ஊருக்கு வந்துள்ளனர்.

    ஆனால் வேலைக்கான உத்தரவு எதுவும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள்,மீண்டும் சென்னைக்கு சென்று அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அலுவலகம் பூட்டி கிடந்து உள்ளது.

    அவர்களது எண்களுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து டிராவல்ஸ் நடத்தி வரும் பெண்ணின் வீடு இருக்கும் வட பழனி பகுதிக்கு சென்று பார்த்த போது அந்த வீடும் பூட்டி கிடந்துள்ளது.

    இதனால் விரக்தியடைந்த 25 பேரும் குமரி மாவட்டம் வந்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் புகார் அளித்து உள்ளனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணத்தை வாங்கிய குமரி மாவட்ட ஏஜென்டான திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ரூ.36 லட்சம் வரை தாங்கள் இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

    அப்போது அவர் பணத்தை நாளை காலை 10 மணிக்குள் வழங்குவதாக கூறி இணைப்பை துண்டித்து உள்ளார். பாதிக்கப்பட்ட வர்கள் கூறும்போது தாங்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடு மோகத்தில் இவர்களிடம் ஏமாந்து இருப்பதாக தெரிவித்தனர்.

    • தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • பெண்ணிடம் பண மோசடி செய்ததாக மாரிமுத்துவை கே.புதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விக்ரமங்கலத்தை சேர்ந்தவர் தெய்வம். இவரது மனைவி சுதா (வயது 41). இவர் கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனது மகன் ஞான பிரகாசம் என்ஜினீயரிங் படித்து உள்ளார். அவருக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையில் சுற்றுலா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா, மாரிமுத்து மற்றும் செந்தில்பாண்டி ஆகிய 3 பேரும் எங்களை தொடர்பு கொண்டனர்.

    அவர்கள், தாய்லாந்தில் வேலை வாய்ப்பு உள்ளது. நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் மகனை அங்கு அனுப்பி வைத்து நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    இதனை நம்பி நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் எனது மகனை தாய்லாந்துக்கு அனுப்பாமல் மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சரிவர வேலை தரப்படவில்லை. இதனால் அவர் அங்கு கொத்தடிமையாக வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷ னர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக சுதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுற்றுலா நிறுவனத்திடம் ரூ.2 லட்சம் வழங்கியதற்கான ஆதாரங்களை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து ேமாசடியில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் மதுரை மாட்டுத்தாவணியில் சுற்றுலா ஏஜென்ட் நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா மற்றும் மதிச்சியம் ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 39) ஆகிய 2 பேரும், ஏஜென்ட் செந்தமிழ் பாண்டி என்பவர் உதவியுடன் சுதாவிடம் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது.

    இதனை தொடர்ந்து தாய்லாந்து அனுப்புவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி செய்ததாக மாரிமுத்துவை கே.புதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30 பவுன் நகை அபேஸ்
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே அருள்குன்று பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி தங்கம் (வயது 52). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கம் வீட்டில் தாலி தோஷம் இருப்பதாக கூறி பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார்.

    அப்போது வீட்டில் இருந்து 30 பவுன் நகையை பூஜையில் வைத்தனர். பூஜை முடிந்த பிறகு அந்தப் பெண் நகைகளை துணி ஒன்றில் கட்டி கொடுத்து விட்டு, மாலையில் அதனை பிரித்துப் பார்க்குமாறு தங்கத்திடம் ஒப்படைத்து சென்றார்.

    மாலையில் திறந்து பார்த்தபோது கவரிங் நகைகளை வைத்து இருப்பதை பார்த்து தங்கம் அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து கொல்லங்கோடு போலீசில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் அந்த பெண் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தங்கத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த அடையாளங்களை வைத்து போலீசார் மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இவருக்கு சொந்தமான ஹோட்டல் ஏற்காட்டில் உள்ளது. அந்த ஓட்டலை விற்பதாக கடந்த மாதம் விளம்பரம் கொடுத்துள்ளார்.
    • ரூ.20 ஆயிரத்தை மீட்டு வங்கிக்கணக்கில் சேர்த்த னர். ரூ.53 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 53). இவருக்கு சொந்தமான ஹோட்டல் ஏற்காட்டில் உள்ளது. அந்த ஓட்டலை விற்பதாக கடந்த மாதம் விளம்பரம் கொடுத்துள்ளார்.அதைத் தொடர்ந்து ஒரு நபர் ஜெகதீஷ் இடம் போனில் தொடர்பு கொண்டு அந்த ஓட்டலை வாங்கிக் கொள்வதாக கூறி விலையை பேசி அதில் பாதி தொகையை அட்வான்ஸ் தருவதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் அட்வான்ஸ் தொகையை தருவதற்கு ஜெகதீஷ் இடம் அந்த மர்ம நபர் பதிவு தொகையாக ரூ.73 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் படி கேட்டுள்ளார்.இதை உண்மை என்று நம்பிய ஜெகதீஸ் அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.73 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

    அதன்பிறகு அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.உதவி கமிஷனர் செல்லப்பாண்டியன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்ந்து ஜெகதீஷ் அனுப்பிய ரூ.20 ஆயிரத்தை மீட்டு வங்கிக்கணக்கில் சேர்த்த னர். ரூ.53 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏமாற்றுப் பேர்வழிகள் தற்போது நூதனமாக பல்வேறு முறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும்,பணத்தை இரட்டிப்பு செய்வதா கவும்,விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்புவதாகவும்,கூறி பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

    ஆகவே பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். செல் போனுக்கு வரும் எஸ்எம்எஸ்களை ஆராய்ந்த பிறகு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றனர்.

    • சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் வேலை வாங்கி தருவதாக ரூ.2¾ கோடி மோசடி செய்தனர்.
    • போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    சேலம்:

    சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் பொன்னுசாமி. இவருடைய மகன் அரவிந்த்குமார் (வயது 30). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், சசிகுமார் என்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகமானார். மேலும் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார்.

    இதை நம்பி நான் உள்பட பலர் சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு பல தவணைகளில் ரூ.2 கோடியே 83 லட்சத்தை சசிகுமாரிடம் கொடுத்தோம். ஆனால் அவர் அரசு வேலை வாங்கி தரவில்லை. பின்னர் அவர் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதே போன்று பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகுமார் தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். இதையடுத்து ரூ.2¾ கோடி மோசடி வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறும் போது, 'சசிகுமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி பலரிடம் மோசடி செய்து உள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தான் மேலும் யார், யாரிடம் மோசடி செய்து உள்ளார், மோசடி செய்த பணத்தை என்ன செய்தார், அதை எவ்வாறு மீட்பது என்பது தெரிய வரும்' என்றார்.

    • தனியார் நிறுவனத்தில் ரூ. 15 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கடந்த 2020-ம் ஆண்டு செல்வர த்தினமும், அடுத்த ஆண்டு ஈஸ்வரியும் வேலையில் இருந்து விலகினர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் தெருவில் ஜேம்ஸ் கென்னடி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு இந்திரா நகரைச் சேர்ந்த செல்வரத்தினம் (38) விற்பனையாளராகவும், செட்டிக்குடி தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (38) என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணியாற்றினர். கடந்த 2020-ம் ஆண்டு செல்வர த்தினமும், அடுத்த ஆண்டு ஈஸ்வரியும் வேலையில் இருந்து விலகினர்.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது செல்வர த்தினம், ஈஸ்வரி ஆகியோர் ரூ. 15 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரிடம் பணத்தை தருமாறு கேட்டபோது உரிய பதில் இல்லை. இதையடுத்து அந்த நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக செல்வரத்தினம், ஈஸ்வரி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×