என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துமலை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்28 Dec 2018 2:19 PM GMT (Updated: 28 Dec 2018 2:19 PM GMT)
ஊத்துமலை அருகே மூலநோயால் அவதிப்பட்டு வந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 31). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மூலநோய் வந்ததால் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என்றதால், அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறினார்.
இதில் மனம் உடைந்த அவர் கடந்த 15-ந் தேதி காற்றாலை மின்நிலையத்தில் மின்வயரை பிடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித் தனர். அங்கு வெங்கடேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் வெங்கடேஷ்சின் முகத்தின் ஒரு பகுதி கருகி மோசமான நிலையில் காட்சி அளித்தது.
இதற்காக தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி திடீர் என்று அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான வெங்கடேஷ் கடந்த 25-ந் தேதி அரியநாயகிபுரத்தில் உள்ள அவரது அக்காள் வீட்டுக்கு சென்று அவரை பார்த்து பேசிவிட்டு, வீட்டுக்கு போவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இதனால் வெங்கடேசை அவரது உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஊத்துமலை ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில், வெங்கடேஷ் உடல் மிதந்தது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஊத்துமலை போலீசாரும், ஆலங்குளம் தீயணைப்புபடை வீரர்களும் விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X