என் மலர்
நீங்கள் தேடியது "walking"
- நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும்.
- பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள்.
உடற்பயிற்சி என்பது எல்லோருக்குமே முக்கியம். அப்போதுதான் ஆரோக்கியம், உடல் கட்டுக்கோப்பை காக்க முடியும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். அதிலும், குடும்பத்தின் முதுகெலும்பாய் உள்ள பெண்கள், அன்றாடம் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஆனால், வீட்டு வேலை, வெளி வேலை என்று எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் அவர்கள், உடற்பயிற்சி செய்ய தங்களுக்கு நேரமில்லை என்கிறார்கள்.
அப்படி நேரமில்லாத பெண்கள், குறைந்தபட்சம் 2 பயிற்சிகளாவது செய்வது நல்லது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 30 நிமிடங்களேனும் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
வாராந்திர பழக்கமாக 2 பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்வது, அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு உதவும். அந்த பயிற்சிகள் பற்றி...
நடைபயிற்சி
நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும். உட்கார்ந்த வாழ்க்கைமுறையை கொண்டவராக இருந்தால் அதை மாற்றுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நடைபயிற்சி சிறந்த தேர்வாகும். பரபரப்பான நாட்களிலும், நடப்பதற்கு நேரத்தை ஒதுக்குவது மனதை அமைதியாகவும் இலகுவாகவும் உணரச் செய்யும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 மணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது. இந்த 3 மணி நேரத்தை 45 நிமிடங்களாக பிரிக்கலாம். வாரத்தின் 7 நாட்களில் 4 நாட்கள் வேகமான நடைபயிற்சி செய்ய வேண்டும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் தசைகளை யும் வலிமையாக்கும்.

எடை தூக்குதல்
பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள். இது ஆண்களுக்கானது என பல பெண்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் எடை தூக்கும் பயிற்சி, பெண்களின் உடலை வலிமையாக்குவதில் முக்கியப்
பங்காற்றுகிறது. வாரத்தில் 2 முறையாவது எடைகளை தூக்கி பழகவேண்டும். முதலில் குறைந்த எடைகளைத் தூக்கி பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எடையை அதிகரிக்கலாம். வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் எடை பயிற்சிகளை செய்யலாம்.
பெண்கள் உடற்பயிற்சிக்கு என்று ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என ஒதுக்க தேவையில்லை. அவர்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையில் காலையில் 10 நிமிடங்கள், மதியம் 10 நிமிடங்கள், இரவில் 10 நிமிடங்கள் என பிரித்து, மொத்தத்தில் 30 நிமிடங்கள் நடப்பது போதும்.
வாரத்தில் 2 நாட்களாவது எடைகளுடன் கூடிய பயிற்சியை செய்ய 30 நிமிடங்கள் அல்லது குறைந்த பட்சம் 15 நிமிடங்களை ஒதுக்கலாம். 3-3-3 விதியை பின்பற்றலாம். மூன்று வெவ்வேறு பயிற்சிகளை மூன்று செட்டுகள் செய்வதே 3-3-3 விதியாகும்.
இது பெண்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் எளிதாகிவிடும்.
முடிந்தால் வீட்டிலோ அல்லது பெண்களுக்கு என்று உள்ள உடற்பயிற்சிக் கூடங்களிலோ எடைப்பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்ளலாம்.
- நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள் இந்த பயிற்சியை எளிமையாகவே செய்துவிடலாம்.
- ஒரே இடத்தில் நின்றபடி இந்த பயிற்சியை இன்னும் எளிமையாக செய்யலாம்.
யோகா, நடைப்பயிற்சி இவை இரண்டும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இவை இரண்டின் கலவையாக விளங்கும் 'நடைப்பயிற்சி யோகா?' பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை முயற்சித்து பார்க்க ஆர்வம் காட்டுவதுமில்லை. நடைப்பயிற்சியின் எளிமையையும், யோகாவின் நினைவாற்றலையும் இணைக்கும் அழகான பயிற்சியாக நடைப்பயிற்சி யோகா அமைந்திருக்கிறது. அது பற்றி அறிந்து கொள்வோமா?
யோகாவில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது?
யோகாவை வழக்கமாக ஓரிடத்தில் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நடைப்பயிற்சி யோகாவை அதன் பெயருக்கேற்ப சற்று உடல் அசைவுகளுடனோ, நடந்த நிலையிலோ மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது பாயில் அமர்ந்து பயிற்சி செய்யும் பாரம்பரிய யோகாவை போல் அல்லாமல் நடைப்பயிற்சி யோகா என்பது 'மனதுடன் கூடிய இயக்கம்' பற்றியதாக அமைந்திருக்கும். அதாவது நடைப்பயிற்சியின்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஏற்ப சுவாசத்தின் செயல்பாட்டையும் நிர்வகித்து இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
எப்படி செய்வது?
நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள் இந்த பயிற்சியை எளிமையாகவே செய்துவிடலாம். இந்த நடைப்பயிற்சி யோகாவை தொடங்கும்போது மனம் அமைதி நிலையில் இருக்க வேண்டும். எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்கக்கூடாது. நடக்க தொடங்கியதும் மூச்சை உள் இழுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நான்கு காலடிகள் எடுத்து வைத்ததும் மூச்சை உள் இழுத்துவிட்டு பிறகு நான்கு காலடிகள் நடந்த பிறகு மூச்சை வெளியே விடலாம். இப்படி நான்கு காலடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள் இழுத்தும், வெளியேற்றியும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். நடக்கும்போது கைகளை நன்றாக நீட்டிய நிலையிலும், தோள்பட்டையை நேர் நிலையிலும் வைத்தபடி பிடித்தமான யோகாசன போஸ்களை செய்தும் பயிற்சி மேற்கொள்ளலாம்.
ஒரே இடத்தில் நின்றபடி இந்த பயிற்சியை இன்னும் எளிமையாக செய்யலாம். தரையில் நேர் நிலையில் நின்றபடி நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும். பின்பு குனிந்து கால் விரல்களுக்கு நேராக தலையை வைத்தபடி கைகளை ஊன்ற வேண்டும். அதைத்தொடர்ந்து கைகளை முன்னோக்கி எடுத்து வைத்து நடப்பது போல் தவழ்ந்து செல்ல வேண்டும். பின்பு பின்னோக்கி கைகளை கொண்டு வந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அப்போது மூச்சை நன்றாக இழுத்து அசைவுக்கு ஏற்ப சுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.
நடைப்பயிற்சி யோகாவின் உடல் ரீதியான நன்மைகள்
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
உடல் தசைகளை வலுப்படுத்தும்.
மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தும்.
உடல் எடை குறைவதற்கு உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மன ரீதியான நன்மைகள்
மன அழுத்தத்தைக் குறைக்கும்.
மன அமைதியை மேம்படுத்தும்.
ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும்.
மனத்தெளிவை உண்டாக்கும்.
தேவையற்ற பதற்றத்தை கட்டுப்படுத்தும்.
சுவாசம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.
- கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன.
- ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
வயதாகும்போது தசையின் நிறை, வலிமை, செயல்பாடுகள் படிப்படியாக பலவீனமடைய நேரிடும். இந்த நிகழ்விற்கு என்ன பெயர் தெரியுமா? இது மருத்துவ துறையில் `சர்கோபீனியா' என அழைக்கப்படுகிறது.
வயது ஏற ஏற தசை இழப்பு ஏற்படும். இதனால், நடையின் வேகம் குறையும். கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியாது. இதன் தாக்கத்தின் தன்மை மனிதர்களுக்குள் மாறுபடும். முதுமை தவிர, புகைப்பிடித்தல், மது பழக்கம், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, வைட்டமின் டி, புரதச்சத்து குறைபாடு ஆகியவையும் காரணிகளாக கூறப்படுகிறது. சர்கோபீனியாவை எவ்வாறு தடுப்பது என்று பார்ப்போம்.
சுறுசுறுப்பாக இருங்கள்
தசை இழப்பை தடுக்க எப்பொழுதும் உடலானது இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்கள் முடிந்தவரை நிற்க முடிந்தால் நில்லுங்கள், உட்கார முடியுமாயின் சிறிது நேரம் உட்காருங்கள். எப்பொழுதும் படுத்தே இருக்க அனுமதிக்காதீர்கள். தசை இழப்பை தடுப்பதற்கு சிறந்த வழி இயங்கி கொண்டே இருப்பதுதான்.

வயதானவர்களை நடக்க ஊக்கப்படுத்துங்கள்
வயதானவர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்களை எப்பொழுதும் படுத்தே இருக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ ஊக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் தடுமாற்றமின்றி நடப்பதற்கு உதவுங்கள். இல்லையெனில் அவர்கள் முன்பை விட மிகவும் பலவீனமாகிவிடுவார்கள்.

ஒரு வாரம் அவர்கள் படுக்கையில் இருந்தால், தசை நிறையில் 5 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். மேலும் அவர்களால் இந்த இழப்பை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்க முடியாது.
ஆஸ்டியோபோரோசிஸை விட பாதிப்பு அதிகம்
எலும்பின் வலிமை குறைந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறும் ஒரு நிலைக்கு `ஆஸ்டியோபோரோசிஸ்' என்று பெயர். இதனால் அவர்கள் எளிதில் கீழே விழுந்து எலும்பை உடைத்துக் கொள்வார்கள். ஆனால் இதை விட சர்கோபீனியா அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தசை நிறை குறைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுத்துவிடும்.

ஓய்வில் இருந்தால் விரைவான தசை இழப்புக்கும் வழிவகுக்கும்
கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன. எனவே உடலின் இயக்கத்திற்கு அவை மிகவும் முக்கியமானவை. வயதானவர்கள் உட்கார்ந்து அல்லது படுத்தே இருப்பதால் கால்களின் இயக்கம் குறைகிறது. இது கால்களின் தசையை பலவீனப்படுத்துகிறது.
கால்களில் உள்ள தசைகள் எப்பொழுதும் ஓய்வில் இருந்தால், அது மோசமான விளைவை சந்திக்கிறது. நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் தசை நிறையை சரியாக பராமரிக்க உதவும் சிறந்த வழிகளாகும்.

வயதாகி முதுமை எட்டும்போது, கால்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தசைகள் வலிமைப்படும். இரண்டு வாரங்களுக்கு கால்களை அசையாமல் வைத்திருந்தால், பத்து வருட காலத்திற்கு அதன் வலிமையை இழக்க நேரிடும்.
சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் தசை வலிமையை பராமரிக்க உதவிடும். எனவே கால்களின் வலிமையை பராமரிக்க ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களில் 5 முதல் 13 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 முதல் 50 சதவீதம் பேரும் சர்கோபீனியா பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த 40 ஆண்டுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இது பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தசை இழப்பை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், சுறுசுறுப்பாக இருந்தால் அதன் தீவிரத்தைக் குறைக்கலாம்.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார்.
- 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பைச்சேர்ந்தவர் மாதவன். மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவர் காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, 3 நபர்கள் சாலையில் தள்ளிகொண்டு சென்றதை பார்த்து, நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தள்ளிகொண்டு சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.
தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராஜகண்பாதி, சார்லஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் விசாரித்தபோது, திருவாரூர் அண்ணாநகர் பின்னவாசலைச்சேர்ந்த சதீஷ்(வயது18) அவருடைய நண்பர் திருவாரூர் தாமரைக்குளம் தெருவைச்சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து, இருவரும் ஏற்கெனவே திருடிய ஒரு மோட்டார் சைக்கிளுடன் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு சிலர் வந்து கேட்டனர்.
- நடைபயிற்சி, கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு சிலர் வந்து கேட்டனர். பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி கால்பந்து விளையாடுவதற்கு பள்ளி மைதானத்தில் அனுமதிக்க முடியாது என்று பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். எனவே நடைபயிற்சி, கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.
- கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி.
- சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, கொள்ளிடம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. ஆனால் இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை 8 மணி வரையும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.
பனிப்பொழிவு காரணமளாக நடைபயிற்சி செய்பவர்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது.
- நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது. அத்தியூரில் தொடங்கிய நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார். இந்த பிரசார நடைபயணம் சின்னகொள்ளியூர், சிவபுரம், ஓடியந்தல் கிராமங்கள் வழியாக வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமாலை, ஆட்டோ சங்கத் தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் உத்தரக்கோட்டி, பாலமுருகன், அம்பிகா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் ஆதார விலை வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துத வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
- 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.
- இவற்றை நாளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் ஸ்கேட்டிங் தளம் உள்ளிட்டவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறாா்.
இந்த விளையாட்டரங்க–த்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்கேட்டிங் தளம், இரு கையுந்து பந்து தளங்கள், 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.
இவற்றை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.
இதையொட்டி, அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த்,
மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மைதானத்தை சீரமைத்துத்தர வேண்டும்.
- மைதானம் புதர் மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மைதானம் சீரமைப்பு செய்து தர வேண்டும். முறையான பராமரிப்பு இன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அதிகளவில் புதர் மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.
புதர் அதிகளவில் இருப்பதால் பகலிலேயே விஷ பூச்சிகள் இங்கு அடைக்கலம் ஆகும் வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளி மாணவர்கள்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவ ர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டுமென அரசுக்கு பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய நலமன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி ரம்யா (வயது36). இவர்கள் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று ஆலம்பட்டி-திருமங்கலம் மெயின் ரோட்டில் பாய்ஸ் டவுன் பகுதியில் ரம்யா நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத் தில் வந்த 2 மர்ம நபர்கள், ரம்யா கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தங்க தாலி செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி செல்லாச்சி (வயது76). இவரும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் 2 பெண்களும் புல்லலக் கோட்டை சாலையில் இன்று காலை நடைபயிற்சி சென்றனர். முனியசாமி கோவில் அருகே சென்ற போது அங்குள்ள பாலத்தில் 2 மர்ம நபர்கள் அமர்ந்திருந்தனர்.
அந்த நபர்கள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களை நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சென்றுள்ளனர். பாலத்தில் இருந்து இறங்கி செல்லும்போது சற்று இடைவெளி விட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த மர்மநபர்கள் அவர்களின் பின்னால் வந்துள்ளனர்.
திடீரென மர்மநபர்கள் செல்லாச்சி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, பாண்டியன்நகர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மாரிமுத்து, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- விளம்பரத்திற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார் என்று முத்தரசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
- ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது. முன்னாள் எம்பி லிங்கம் வரவேற்றார். இந்திய விவசாயிகள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் முத்தரசன் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தொழிலாளர் நலவாரியம் உள்ளது. வேளாண் துறைக்கு தனி அமைச்சகமும் பட்ஜெட்டும் தாக்கல் செய்வது வரவேற்புக்குறியது.
ஆனால் ஒரு கோடிக்கும் மேல் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு என தனி துறையோ, வாரியமோ இல்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தது போல் விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.
100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து, ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.எல்.சி. மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்துவது மாநில அரசு தான். அறுவடை முடியும் வரை வாய்க்கால் வெட்டும் பணிகளை நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
ராமேசுவரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடம். அண்ணாமலை யாத்திரையை ராமேசு வரத்தில் தொடங்கியது மூலம் பா.ஜ.க.விற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதை காட்டுகிறது. விளம்பரத்திற்காக அண்ணாமலை யாத்திரை செல்கிறார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை.
கொடநாடு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன், தங்கமணி, பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.