என் மலர்
நீங்கள் தேடியது "bike theft"
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினர்
- வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் கிஷோர் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை வெளியே வந்து பார்த்த போது பைக் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மழையூர் கூட்டுச் சாலையில் சப் -இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமை யிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி பைக்கில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கினர்.
அப்போது பைக்கின் பின்னால் வந்தவர் தப்பி யோடி விட்டார். பிடிபட்ட வரிடம் விசாரித்தபோது சேத்அஜீஸ் (30) என்பதும் வடவணக்கம்பாடி பகுதியில் கிஷோரின் மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்அஜீசை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அஜீசை வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ம கும்பல் பைக்குகளை திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இது குறித்து அதிக அளவில் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் தனது பைக்கை கந்தனேரியில் உள்ள மணல் குவாரி அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகொண்டா பகுதியில் இதேபோல் அடிக்கடி பைக் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரவிந்தனிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
- அரவிந்தனை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நல்ல கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் பிரிண்டிங் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார்.
பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். பூண்டி கன்னிமார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அரவிந்தனுக்கு போன் வந்தது. இதனையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டுமிட்டு அரவிந்தனை கத்தியால் குத்தியதோடு தலையில் பயங்கரமாக அடித்தனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனை அடுத்து 3 பேரும் அரவிந்தனிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அவிநாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அரவிந்தனை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபரை தாக்கி செல்போன் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில மாதங்களாக வாகன ங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் வாகன திருட்டை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
பைக்குகள் மற்றும் கார்கள் அடிக்கடி திருடப்படுகின்றன. இவற்றில் பைக்குள் மிக அதிக அளவில் திருடப்படுகிறது. புதுவை பூந்துறை ரோடு சிவாஜி நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது அவரது பைக் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போல் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் வயது 44 இவர் தனது பைக்கை பெரிய கடை பூ மார்க்கெட் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் இரு போலீஸ் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் பைக் திருட்டால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.
- பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வடமதுரை:
அய்யலூர் அருகே கடவூர் பிரிவு சாலையில் ஒரு வாலிபர் சந்தேகத்தி ற்கிடமாக சுற்றித்திரிந்தார். சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.
இதேபோல் 5க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதை கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பொது மக்கள் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி மாவட்டம் எலமனம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என தெரிய வந்தது. மேலும் அவருடன் வந்த 2 வாலி பர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவு திருடு போகிறது. வெளி யூர்களில் இருந்து வரும் நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- லாக்கை உடைத்து துணிகரம்
- ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் தோட்டப்பா ளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது21). இவர் ரங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் மெக்கா னிக்காக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஸ்ரீதர் தனது பைக்கை வழக்கம்போல், ரங்காபுரத்தில் உள்ள கடைக்கு எதிரே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த அவர் அங்கிரு ந்த கடை ஊழியர்களுடன் அருகிலுள்ள்ள பகுதிகளில் பைக்கை தேடினார்.
அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் பைக்கின் லாக்கை உடைத்துவிட்டு தள்ளி சென்றதை பார்த்தனர். உடனடியாக 2 பேரையும் பிடித்து சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் ஓட்டேரி அடுத்த குளவிமேட்டைச் சேர்ந்த சிபிராஜ் (21) மற்றும் சத்துவாச்சாரியைச் சேர்ந்த யுவராஜ் (23) என்பதும் தெரியவந்தது.
இதில் சிபிராஜ் மீது ஆந்திர மாநிலம் பாகாலா, காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சைக்கிள், பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மின் மோட்டார், வயர் மற்றும் பைக் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி அருகே சின்னமனூர்- சுக்காங்கால்பட்டி சாலையில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். அவரது மனைவி விஜயலட்சுமி (வயது63). இவர்கள் சொந்தமாக விவசாய நிலம் மற்றும் தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
கோவிந்தராஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜயலட்சுமி மட்டும் பண்ணை வீட்டில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சீலப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி, நல்லகருப்பன் பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (48). இவரது வீட்டில் இருந்த மோட்டாரை தேவதானப்பட்டியை சேர்ந்த பிச்சைபாண்டி (46) என்பவர் திருடிச் சென்றார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிச்சை பாண்டியை கைது செய்தனர்.
- தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்ததை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தேனி:
தேனியை சேர்ந்தவர் முத்து (வயது45). தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (46). இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அேத பகுதியை சேர்ந்த கோகுலபாண்டியன், குருநாதபாண்டியன் ஆகியோர் செல்போனை திருடிச் சென்றனர். அவர்களை பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்பட ைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே படுக்கச் சென்றார்.
பின்னர் நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சரவணன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து போலீசார் பையூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் ஆரணி பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பிரவீன் குமார் என்பதும், சரவணன் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.
பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
- பைக் பறிமுதல் செய்யப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ரெட்டிவலம் பகுதியில் நேற்று நெமிலி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நந்திவேடுதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- கண்காணிப்பு கேமராவில் பதிவானது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 32). இவருக்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தங்களது வீட்டின் வெளியே வழக்கம் போல் நிறுத்தி வைத்து இருந்தார்.
நேற்று மாலை அன்பரசு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அன்பரசு நாட்டறம்ள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.