search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang arrest"

    • மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிந்தாமணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களை ஆய்வு செய்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த முத்து மகன் சரவணபாரதி (வயது 22), திருச்சி சுப்புர மணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மணி (27), மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சங்கர் மகன் சீனிவாசன் (23), பாஸ்கரன் மகன் கண்ணன் (19) என தெரியவந்தது.

    இவர்கள் மீது திருச்சி, சிவகங்கை, கரூர், சிலை மான் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது, கூட்டுக்கொள்ளை அடித்தது, வழிப்பறி செய்து நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    டி.பி. சத்திரத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அமைந்தகரையை அடுத்த டி.பி. சத்திரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை மற்றும் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கீழ்ப்பாக்கம் துனை கமி‌ஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உதவி கமி‌ஷனர் ஜெகதீசன் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கு உள்ள குடியிருப்பின் மொட்டை மாடியில் சிறிய பொட்டலங்கள் போட்டு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற குணசேகரன், கருப்பு என்கிற ஞானசேகரன், தமிழரசன், செந்தில்குமார், வினோத்குமார், கவணன், வினோத், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கீர்த்தி வாசன், சரத்குமார் உள்ளிட்ட 9 பேரையும் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்

    மேலும் டிபி சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக புகுந்து தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் புது பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது பஸ்நிலையம் பின்புறம் ஒரு சாக்கு பையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் 4-வது வார்டு சுக்காங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 38) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 23 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த உலகமாயன் (வயது 50) என்பவரிடம் இருந்து 39 மது பாட்டில்களையும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பேச்சி (வயது 52) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

    தேனி மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருகின்றனர். போலீசார் ரோந்து சென்று இவர்களை பிடித்து அபராதம் விதித்த போதும் தொடர் கதையாகி வருகிறது.

    போடி தாலுகா இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் போலீசார் ரெங்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த குலாளர்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 67 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாரதி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் மது ஊற்றிக் குடித்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர வெங்கடேசன் தலைமையில் போலீசார் டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த பரமசிவம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சென்னை சாலிகிராமத்தில் சினிமா கம்பெனி நடத்துவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    போரூர்:

    சாலிகிராமம் வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா நிறுவனம் என்கிற பெயரில் சிலர் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதாக தியாகராயநகர் துணை கமி‌ஷனர் அசோக்குமாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் நடேசன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு அறையில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது. சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜா பெருமாள், நாமக்கலைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலு, மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பது விசாரணையில் தெரிந்தது.

    சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 3 இளம்பெண்களை மீட்டு மைலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பு நிறுவனம் என்கிற பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சினிமா கம்பெனி நடத்துவதாக கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெருமாள், பாலாஜி, சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ஆண்டிப்பட்டியில் அனுமதி இன்றி மது விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் அல்லல்ஓடை பகுதியில் குமணன்தொழுவை சேர்ந்த வேலுத்தேவர்(வயது42) என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.

    அவரிடமிருந்த அரைகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மூலக்கடை எதிரே உள்ள பெட்டிக்கடையில் சிறப்பாறையை சேர்ந்த அன்பழகன்(43), அதேபகுதியில் துரைசிங்கம்(42), குமணன்தொழு கருப்பசாமிகோவில் அருகே உள்ள மீராதெருவை சேர்ந்தவர் ராஜா(40) மற்றும் கடமலைக்குண்டு வசந்தகுமார்(31) ஆகியோர் அனுமதி இன்றி மதுபதுக்கி விற்றதாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பூந்தமல்லி அருகே வேனில் மாட்டை கடத்திய கும்பலை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று பொதுமக்கள் பிடித்தனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பகுதியில் அடிக்கடி மாடுகளை திருடி கடத்தும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் மாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஒரு கும்பல் மாடுகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தது.

    இதனால் பரபரப்பான அந்த பகுதி மக்கள் மாடுகளை வேனில் ஏற்ற முயன்றவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் வேனுடன் பூந்தமல்லி ரோடு தப்பிச் சென்றது. பொதுமக்கள் வாகனங்களில் அந்த வேனை துரத்தி சென்றனர்.

    சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று வேனை மடக்கினார்கள். அந்த வேனில் 7 பேர் இருந்தனர்.

    அவர்களில் 6 பேர் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஒரு வாலிபர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். அவனுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவனிடம் போலீசார் விசாரித்த போது பெயரை சொல்ல மறுத்து விட்டான். அவனது ஆதார் அட்டையை வைத்து அவனது பெயர் தாரிக் என்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களும் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.

    பொதுமக்கள் மடக்கி பிடித்த வேனில் ஒரு மாடு மட்டும் இருந்தது. அந்த மாட்டையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    தேனி மற்றும் கம்பத்தில் கஞ்சா விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கம்பம் மெட்டு 18-ம் கால்வாய் பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற சிவசாமி மற்றும் கேரளாவை சேர்ந்த சாபு ஆகியோர் தப்பி ஓட முயன்றனர். இதில் சாபுவை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் தேனி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் உழவர்சந்தை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற இளங்கோவன் என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு வாங்கி வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் பகுதியில் மது விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். #arrest

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடை மூலம் குடிமகன்கள் மது வாங்கி வந்தனர். ஆனால் சில பார்களில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    மேலும் சிக்கன் மற்றும் பெட்டிக்கடைகளிலும் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. திண்டுக்கல் புறநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சாணார்பட்டி, கோபால் பட்டி, சிறுகுடி, அம்பாத்துரை, செட்டியபட்டி, மொட்டனம் பட்டி, நத்தம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் கள்ள சந்தையில் மது விற்ற கந்தசாமி, ரவி, செல்வம், மணிமாறன், அய்யனார் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் திண்டுக்கல் நகர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் சேக் தாவூது தலைமையில் மின் மயானம், மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம், வடக்குரத வீதி, பழனிசாலை, குள்ளனம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    மது பதுக்கி விற்ற 9 பேரை கைது செய்தனர். மேலும் 150 மது பாட்டில்கள் மற்றும் ரூ.8500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை தொடரும். அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். #arrest

    ஆண்டிப்பட்டி அருகே வைகையாற்றில் மணல் திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அமச்சியாபுரம் பகுதியில் டிராக்டரில் 2 பேர் மணல் திருடிச்சென்றனர்.

    போலீசார் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்து அதனை ஓட்டி சென்ற ராஜேஸ்வரன் (36) என்வரை கைது செய்தனர். தப்பி ஓடிய பூபாலன் என்பவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ஆத்தங்கரைபட்டி பகுதியில் வைகை ஆற்று படுகையில் இருந்து மணல் அள்ளி சென்ற செல்லாண்டி என்பவரை ராஜதானி போலீசார் கைது செய்தனர்.

    கரட்டுப்பட்டி பகுதியில் சாக்கு மூட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் திருடி சென்ற பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரவாயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    மதுரவாயல், துண்டலம் தாஸ் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ். கார்பெண்டர். கடந்த 31-ந்தேதி அவர் செட்டியார் அகரம் கீரை தோட்டம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றார்.

    அப்போது அங்கு வந்த 5பேர் கும்பலில் ஒருவன் சதிஷிடம் சென்று ஒரு போன் செய்துவிட்டு தருவதாக கூறி செல்போனை கேட்டார். உடனே சதிஷ் தனது செல் போனை அந்த நபரிடம் கொடுத்தார்.

    சிறிது நேரத்தில் கழித்து செல்போனை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை தடுக்க முயன்ற சதீசை அவர்கள் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் முதுகு, மூக்கில் படுகாயமடைந்த சதிஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தப்பி சென்ற கும்பலை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வழிப்பறி கும்பல் மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த சிவா, விஷ்ணு, கிரிதரன், ராஜேஷ், குன்றத்தூர் புதுவட்டாரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து மதுரவாயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், திருட்டிற்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    தேனி அருகே பார் ஊழியரை தாக்கி மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனி செட்டிபட்டி அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது45). இவர் பூதிப்புரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று மது குடிக்க வந்த 3 பேர்களிடம் பணம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரத்தினவேலுவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ரத்தினவேல் புகார் அளித்தார். அதன்பேரில் உத்தமபாளையம் சூரியநாராயணபுரத்தை சேர்ந்த மோகன் (27), உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அர்ஜூன் (28), தேனி-கம்பம் ரோடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×