search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் அதிரடி மது விற்ற கும்பல் கைது
    X

    தேனி மாவட்டத்தில் அதிரடி மது விற்ற கும்பல் கைது

    தேனி மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருகின்றனர். போலீசார் ரோந்து சென்று இவர்களை பிடித்து அபராதம் விதித்த போதும் தொடர் கதையாகி வருகிறது.

    போடி தாலுகா இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் போலீசார் ரெங்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த குலாளர்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 67 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாரதி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் மது ஊற்றிக் குடித்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர வெங்கடேசன் தலைமையில் போலீசார் டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த பரமசிவம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×