search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wine bottle sales"

    • காவேரிபுரம் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
    • இவரது சைக்கிள் கடையில் மது பாட்டில் விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 47). இவர் காவேரிபுரம் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது சைக்கிள் கடையில் மது பாட்டில் விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கொளத்தூர் போலீசார், கோபால் சைக்கிள் கடையில் சென்று சோதனை செய்ததில், அவர் மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 97 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருகின்றனர். போலீசார் ரோந்து சென்று இவர்களை பிடித்து அபராதம் விதித்த போதும் தொடர் கதையாகி வருகிறது.

    போடி தாலுகா இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் போலீசார் ரெங்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த குலாளர்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 67 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாரதி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் மது ஊற்றிக் குடித்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர வெங்கடேசன் தலைமையில் போலீசார் டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த பரமசிவம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    டாஸ்மாக் கடைகளில் சிறுவர்களுக்கு மது விற்பதை கண்காணிக்க 3 ஆயிரம் கடைகளில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. #Tasmac

    சென்னை:

    மதுக்கடைகளில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற விதி உள்ளது.

    இருப்பினும் சிறுவர்களுக்கும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் இளம் தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி கெட்டுப் போகிறார்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் கூறுகிறார்கள்.

    இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 3 ஆயிரம் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

     


    ஒரு கடைக்கு 2 கேமராக்கள் வீதம் 6 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், போலி மதுபானங்கள் விற்பனை தடுத்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கேமராக்கள் பொருத்த ரூ.5 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் 38 இடங்களிலும், மண்டல அளவில் 5 இடங்களிலும் கண்காணிப்பு அறைகளும் அமைக்கப்படுகிறது.

    அடுத்த மாதம் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். #Tasmac

    ராமநாதபுரம் அருகே 148 மது பாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் மது விலக்கு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மீலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி பலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்றனர்.

    ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கூர் பகுதியில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரனாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 148 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மது பாட்டிகளை கடத்தி வந்தது தெற்கூரை சேர்ந்த மூர்த்தி மகன் பிரபாகரன் (வயது 29), முனியாண்டி மகன் பூசைத்துரை (30) என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×