என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 100684
நீங்கள் தேடியது "தேனி"
மதுரை - தேனி ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை - தேனி - மதுரை ரெயில்கள் கால அட்டவணையில் நாளை (1-ந் தேதி) முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரெயில் (06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரெயில் (06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மதுரை-தேனி ரெயிலில் முதல் நாளில் 634 பயணிகள் பயணம் செய்ததால் ரூ. 25 ஆயிரத்து 751 கட்டணம் வசூல் ஆனது
மதுரை
மதுரை- தேனி இடையே முதன்முதலாக முன்பதிவற்ற பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணி சீட்டு பெற்று பயணம் செய்தனர். இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு கிடைத்த கட்டண வசூல் ரூ.14ஆயிரத்து 940 ஆகும்.
அடுத்தபடியாக வடபழஞ்சியில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.1,590 கிடைத்துள்ளது.
இேதபோல் உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள், ரூ.3,270 கட்டணம் செலுத்தி பயணம் செய்து உள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூ. 1,950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர்.
எனவே மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற முன்பதிவற்ற பயணிகள்ரெயிலில் மொத்தம் 574 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.21,750 கிடைத்துள்ளது.
இதேபோல் தேனியில் இருந்து மதுரைக்கு வந்த ரெயிலில் 377 பேர் பயணம் செய்தனர். ஆண்டிபட்டியில் இருந்து 213 பயணிகள் பயணம் செய்ததன் மூலம் ரூ.7,476, கிடைத்துள்ளது. உசிலம்பட்டியில் இருந்து 44 பயணிகள் மூலம் ரூ.1,320 கிடைத்து உள்ளது.
மதுரை- தேனி இடையேயான பயணிகள் ரெயிலில் நேற்று மட்டும் ஓட்டுமொத்தமாக 634 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம்
ரூ. 25,751 கட்டணம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள், வியாபாாிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை
மதுரை - தேனி இடையே வருகிற 27-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ரெயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்ட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளா, பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி - மதுரை ரெயில் போக்குவரத்து கடந்த
1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓடத் தொடங்கியது.
குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரெயில் சேவை பயனுள்ளதாக இருந்தது.
இந்த ரெயில் பாதை அகலரெயில் பாதை பணிக்காக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை - போடி அகல ரெயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை - உசிலம்பட்டி 37 கி.மீ., துாரத்தை ஜனவரி 2020-ல் பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி - ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-ல் அபய்குமார் ராயும் ஆய்வு செய்தனர்.
ஆண்டிபட்டி - தேனி 17 கி.மீ. தூரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரெயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார்.
மதுரை - தேனிக்கு முதல் கட்டமாக ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடி மே 26-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் மதுரை- தேனி ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி இடையே மே 27 முதல் ரெயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட ரெயில் பயணிகள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து, ரெயில் ஓடுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தோம்.
பிரதமர் சென்னையில் ரெயில் சேவையை 26-ந் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி - போடி இடையே 15 கிலோ மீட்டருக்கு பணி நடக்கிறது. விரைவில் அதுவும் முடிந்துவிடும்.மேலும், மதுரை - போடிக்கு மின்சார ரெயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின்மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது என்றனர்.
தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை வழியாக தேனிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X