search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl missing"

    • அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார்.
    • நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் நடை மேடை 1-ல் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது புஷ்பா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அதிர்ஷ்ட மூர்த்தி சேலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மனைவியுடன் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வந்தேன். அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற எனது மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.

    ஆனால் எனது தாயாரின் நகை 20 பவுன், 15 ஆயிரத்தை எடுத்து சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை, பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற இளம்பெண் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி ரோகினி(24).

    இவர்களுக்கு தரணிஸ்(6), கிரிசினியா(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற ரோகினி மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகினியின் தாய் பஞ்சவர்ணம் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • சந்தியா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • இரவு வெகு நேரமாகியும் சந்தியா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பழைய போஸ்ட் ஆபீஸ் மேல தெருவை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சந்தியா(வயது 22) என்ற மகள் உள்ளார்.

    இவர் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு நெல்லை புதிய பஸ் நிலை யம் அருகே உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இத னால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தச்ச நல்லூர் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சந்தியா எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போதுவை என்ற இடத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு மகனும், 3 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் கணவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருநங்கை ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிற்கு வராமல் திருநங்கையுடன் வசித்து வந்தார். இது குறித்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் நாகராஜை அழைத்து அறிவுரை வழங்கி அவரது மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னரும் இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 3 மாத பெண் குழந்தையுடன் மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் 3 மாத கைக்குழந்தையுடன் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.
    • சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகள் ரதிஷாஸ்ரீ(18). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.

    சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரி ன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.
    • நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 47). விசைத்தறி தொழிலாளி. இவரது 16 வயது மகள் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் இதுகுறித்து கதிர்வேல், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பலவேசமாரி அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.
    • தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை அழைத்து வந்துள்ளார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் பலவேசமாரி(வயது 25) பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.

    நேற்று குரூப்-2 முதன்மை தேர்வு நடைபெற்றதால் அதனை எழுதுவதற்காக பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை சண்முகசுந்தரம் அழைத்து வந்துள்ளார்.

    தேர்வு மையத்திற்கு அவரை அனுப்பிவிட்டு பெருமாள்புரம் என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள தனது மற்றொரு மகளை பார்ப்பதற்காக சென்ற சண்முகசுந்தரம் மீண்டும் மாலையில் திரும்பி வந்துள்ளார். அப்போது பலவேசமாரியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பலவேசமாரியை தேடி வருகின்றனர்.

    விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் அருகே டி.டி.வி.தினகரன் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி மகள் நாகமணி (வயது23). இவர் பி.எட். முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகர்சாமி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது.
    • இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது.

    கடலூர்:

    சிதம்பரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 36) இவர்களுக்கு திருமணம்,ஆகி9 வயதில் பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் ரூ.2 லட்சம் பணத்தை தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது. அதை சரண்யா எடுத்து புவனகி ரியில் உள்ள ஒரு வங்கியில் தனது பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து செந்தி ல்குமார் தனது மனைவி சரண்யாவிடம் கேட்ட போது, இருவருக்கும் இடையில்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. இதனால் சரண்யா கணவர் செந்தில்குமாரிடம் கோபித்துக் கொண்டு தனது 9 வயது குழந்தையுடன் புவனகிரியில் உள்ள  அண்ணன்உத்தண்டி என்பவரது வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து தனது குழந்தையுடன் வெளியே சென்றசரண்யாவை காணவில்லை. இதுகுறித்து அவரதுஅண்ணன் உத்தண்டிபுவனகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் சென்ற சரண்யா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து தேடி வருகி ன்றனர். 

    • சிதம்பரம் அருகே கடைக்கு சென்ற இளம் பெண் மாயமானார்.
    • மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே வ..உசி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 18) இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் விஜயலட்சுமி பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து விஜயலட்சுமி தாய் பொன்மணி சிதம்பரம் நகர தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான விஜயலட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தேனியில் தாய் வீட்டுக்கு சென்ற பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருஷ்ணபிரியா (வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதி கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரியா தேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று வெளியே கடைக்குச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிச் சென்றுள்ளார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் ஊர் திரும்பவில்லை. இதனால் மணிகண்டனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால் கிருஷ்ணபிரியா அங்கும் செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண பிரியாவை தேடி வருகின்றனர்.

    திருச்சி பாலக்கரையில் தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி அனிதா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.

    நேற்று முன்தினம் அனிதா, தென்னூர் காவல்காரன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அனிதா தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    பின்னர் இது குறித்து அவர் தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக அனிதா தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது யாராது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா? என்ற சந்தேகமும் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

    அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் பட்டியலை போலீசார் திரட்டி உள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×