என் மலர்
நீங்கள் தேடியது "Group-2 Exam"
+2
- இந்த ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ ஆகியவற்றின் முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
- மாநகர பகுதியில் தேர்வு நடைபெறும் ஒரு சில மையங்களில் தேர்வர் களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப்பட்ட எண்ணும் ஒத்துப் போகாததாக கூறி சிறிது நேரம் தேர்வு தாமதமானது.
நெல்லை:
இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், துணை பதிவாளர், நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பணி களுக்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
30 தேர்வு மையங்கள்
இந்த ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ ஆகியவற்றின் முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடை பெறுகிறது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வுக் காக நெல்லை மாவட்டத்தில் 24 அமைவிடங்களில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 5,070 பேர் விண்ணப்பித்திருந்த னர். முதன்மை தேர்வை யொட்டி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தமிழ் மொழி தகுதி தாளும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொது தாளும் நடைபெறுகிறது.
இதில் மாநகர பகுதியில் தேர்வு நடைபெறும் ஒரு சில மையங்களில் தேர்வர் களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப் பட்ட எண்ணும் ஒத்துப் போகாததாக கூறி சிறிது நேரம் தேர்வு தாமதமானது.
குளறுபடி
பாளையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவெண் குளறுபடி காரணமாக தேர்வு எழுதுவதில் குழப்பம் ஏற்பட்டு தேர்வர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர்.
அதே நேரத்தில் சிறிது நேரம் தாமதமாக வந்ததாக கூறி நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் 10-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து மாநகர தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
½ மணி நேரம் தாமதம்
சுமார் ½ மணி நேர தாமதத்திற்கு பின்னர் தேர்வர்கள் அந்த மையத் திற்குள் அனுமதிக்கப்பட்டு தேர்வை எழுத தொடங்கி னர். அவர்களுக்கு தாமதத்தை ஈடு செய்யும் வகையில் கூடுதல் நிமிடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பாளையில் உள்ள பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை ஆய்வு செய்தார்.
மாவட்டம் முழுவதும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய 31 வீடியோ கிராபர்கள், தேர்வினை கண்காணிக்கும் வகையில் 30 தேர்வு ஆய்வு அலுவ லர்கள் நியமிக்கபட்டு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்
- பலவேசமாரி அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.
- தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை அழைத்து வந்துள்ளார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் பலவேசமாரி(வயது 25) பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.
நேற்று குரூப்-2 முதன்மை தேர்வு நடைபெற்றதால் அதனை எழுதுவதற்காக பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை சண்முகசுந்தரம் அழைத்து வந்துள்ளார்.
தேர்வு மையத்திற்கு அவரை அனுப்பிவிட்டு பெருமாள்புரம் என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள தனது மற்றொரு மகளை பார்ப்பதற்காக சென்ற சண்முகசுந்தரம் மீண்டும் மாலையில் திரும்பி வந்துள்ளார். அப்போது பலவேசமாரியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பலவேசமாரியை தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் மூலமாக அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைசஸ்ட் பதவிக்கான குருப்-2 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விழுப்புரத்தில் 6 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,653 பேர் விண்ணப்பித்திருந்தனர். விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் நடந்த தேர்வை 788 பேர் எழுதினர். 865 பேர் எழுத வரவில்லை. விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது விழுப்புரம் தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய உதவி பொது வக்கீல் மற்றும் உதவி தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16-ந் தேதி மாலை 5.45 மணி வரை இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். அதன்பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத காவிரி டெல்டா மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16-ந்தேதி தாக்கிய கஜா புயல் அப்பகுதிகளை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகிவிட்டன. அவர்களால் உடனடியாக போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இதே நிலைமை தான் காணப்படுகிறது.

குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக மே மாதத்தில் நடத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே மே மாதத்தில் தேர்வு நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Group2Exam #AnbumaniRamadoss