search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja storm"

    வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் பனை மரங்கள் விழுந்ததால் நுங்கு விலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி, கோவில்பத்து வெள்ளம்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, மணக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மற்றும் தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் இருந்தன. இவை அணைத்தும் கஜா புயலில் விழுந்து விட்டது.

    இதனால் கோடையின் வெப்பத்தை தணிக்க பனைநுங்குகளையும் இளநீரையும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வேளையில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலைகொடுத்து பனை நுங்கையும், இளநீரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

    கஜா புயலின் கோரதாண்டவத்தால் பனை, தென்னை போன்ற மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அதிக அளவில் இயற்கையாக இப்பகுதியில் கிடைக்கும் பனைநுங்கு மற்றும் இளநீரை விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது பனைநுங்கு மற்றும் இளநீர் போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் இளநீர் மற்றும் பனைநுங்கை கொண்டு வந்து இளநீர் ரூ.40க்கும், பனைநுங்கு ரூ.10-க்கு மூன்றும் என விற்பனை செய்கிறார்கள்.

    இயற்கையாக இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக சாப்பிட்ட பனைநுங்கை தற்போது காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசு கொடுத்தாலும் அதிக அளவில் இளநீர் மற்றும் நுங்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது. உப்பு உற்பத்தியில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரிகள் மூலமாகவே அனுப்படுகிறது.

    இந்தநிலையில் கஜா புயலால் கடலிலிருந்து சேர் உப்பள பகுதியில் சேறு புகுந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தற்சமயம் உப்பு உற்பத்தி சீசனில் உப்பு உற்பத்தி செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் உப்பு இலாகா அதிகாரிகள் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களிட மிருந்து இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.

    இதனால் உப்பு உற்பத்தி பணிகள் தற்சமயம் 30 சதவீதமே நடந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி துவங்க ஒரு மாத காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4,200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் வழங்கினர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு- 4200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் நேற்று வழங்கினர்.

    இந்திய அரசின் தேசிய கடல் வனத்துறை தொழில் நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினர்.

    குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் வெங்கடேசன் தலைமையில், அருள்  முத்தையா, வெங்கடேசன், திருமுருகன், சுந்தர வடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆலங்குடி, நெடுவாசல், சுற்றியுள்ள கிராமங்களும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை    தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4,200 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகளை வழங்கினர்.

    முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் ராமசாமி, நூலகர் வெங்கட் ரமணி, ஓய்வு ஆசிரியர் வேலு, பசுமை ராமநாதன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தராஜன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார். #tamilnews
    கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யம் அருகே அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    வேதாரண்யம்:

    கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கரியாப்பட்டினம், செட்டிபுலம் கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்களை இதுவரை வழங்கவில்லை. இதை கண்டித்தும், உடனே புயல் நிவாரணம் வழங்கக்கோரியும் கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் மாசி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை அமைப்பாளர் நந்தன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஏகாம்பரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்துக்குள் விடுப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
    கஜா புயலால் தென்னை மரங்கள் அழிந்ததால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி, பெரிய பட்டினம், தாமரைக்குளம், பெருங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னை விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வந்தது.

    இங்கு பறிக்கப்படும் தேங்காய்களை மதுரையில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வந்தனர். அங்கிருந்து காங்கேயம், வெள்ளக்கோயில், ஈரோடு போன்ற ஊர்களில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    மாவட்டத்தில் சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால் தேங்காய் விளைச்சலில் பெரும் சரிவு ஏற்பட்டது. தேங்காய் விலையும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

    இந்த விலை வீழ்ச்சி படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள் பலர் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பில் தஞ்சாவூர் மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து கொப்பரை தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    கஜா புயலுக்கு முன்பு கிலோ ரூ.22க்கு விற்பனையான தேங்காயை புயலுக்கு பின் தேவை அதிகரிப்பால் தற்போது கிலோ ரூ.33 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தேங்காய் விலை வீழ்ச்சியும் சில வாரங்களில் சரியாவதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் கஜா புயலுக்கு பின்பு விலை அதிகரித்து வருகிறது.

    ரெகுநாதபுரம் தேங்காய் மொத்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டுகளில் மழை இல்லாததால் காய்களின் வடிவம் மாறி காய்ப்பு குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு தேங்காய் எடை 400 கிராம் வரை இருக்கும். மழை இல்லாததால் காயின் எடை குறைந்து தற்போது அதிகபட்சமாக 250 கிராம் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. ஆகவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் பறிக்கக் கூடிய தேங்காய் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் உரம், மருந்தடிப்பு, வெட்டுக்கூலி, உரி கூலி இப்படி பல்வேறு கூடுதல் செலவினங்களை தாங்கி கொண்டு தென்னை விவசாயிகள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னை விவசாயி பெரியபட்டினம் அப்துல் மாலிக் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்து தென்னந்தோப்புகளை வீட்டடி மனைகளுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

    பல்வேறு சுமைகளை தாங்கி தென்னை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தோம். விலை அதிகரித்துள்ள நிலையில் மரத்தில் காய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

    மரத்திற்கு தண்ணீர் விடுவதற்கு கிணறுகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு தேங்காய் காய்ப்பு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.

    கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:
     
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த வடிவேல்& கலைச்செல்வி தம்பதியரின் மகன் நீலகண்டன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கஜா புயலால் இவர் வசிக்கும் குடிசை வீடு மிகுந்த சேதத்துக்குள்ளானது.

    இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர். தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய் துறையினர் வழங்கியுள்ளனர். ஆனால் மிகுந்த சேதத்துக்குள்ளான நீலகண்டன் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் வருவாய்த்துறையினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த நீலகண்டன் தனது வீட்டு ரேசன்கடை அருகே இருந்த டிரான்ஸ்பாரத்தில் ஏறி தனக்கு நிவாரணப் பொருட்கள் வழங்ககோரி கோஷமிட்டவாரே மின்சாரம் பாயும் மின்கம்பியை பிடித்து விட்டார். இதில் நீலகண்டன் உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீலகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நீலகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaStorm
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த 22-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் நாகை - நாகூர் மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் அமிர்தம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி, நகர செயலாளர் பெரியசாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் கஜா புயலால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும், அனைத்து வீடுகள், நிலங்கள், பயிர்களுக்கு முழுவதுமாக இழப்பீடு வழங்கவேண்டும். கஜா புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக நாகை - நாகூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. #GajaStorm
    திருவாரூர் தொகுதியில் அமைச்சர்கள் கஜா புயல் நிவாரண ஆய்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறினார். #Tiruvarurconstituency
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் நடத்தைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தைகளை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர்கள் புயல் நிவாரண ஆய்வுகள் நடத்த முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அனுமதி இல்லாமல் திருவாரூர் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    புயல் சம்பந்தமாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிவாரண நிதி, பொருட்கள் ஆகியவற்றை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறி செயல்படும் எந்தவொரு செயலும் தடுக்கப்படும்.

    தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படிதான் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 19 தொகுதிகளுக்கு கோர்ட்டின் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு இருக்கிறது.

    19 தொகுதி தேர்தல் தொடர்பாக அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எந்திரங்கள், 303 வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வெளிப்படையான, சுமூகமான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

    இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகள், பண விநியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இது கண்காணிப்பு பணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Tiruvarurconstituency
    கஜா புயல் பாதித்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிய அறிவிப்பாகவே கவர்னரின் உரை அமைந்துள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆற்றிய உரை எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பது தான் உண்மை நிலை. தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்குதலுக்கு நிவாரணத் தொகையை முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு இல்லை.

    சரக்கு மற்றும் சேவை வரியில் முக்கியமான பல்வேறு பொருட்களுக்கு மேலும் வரி விகிதத்தை குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கான அறிவிப்பும் இல்லை. அண்டை மாநிலத்தில் இருந்து பெறக் கூடிய நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பும் இல்லை.

    மிக முக்கியமாக கஜா புயல் தாக்கிய மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் மின்கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

    தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் இல்லை.

    குறிப்பாக மது விலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அமலுக்கு வந்து விடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் நிலவும் வறுமையை ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான உறுதியை கொடுக்கவில்லை.

    மொத்தத்தில் தமிழகத்தில் நிலுவையில் இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தித் தரக்கூடிய நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இல்லாததால் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிய அறிவிப்பாகவே கவர்னரின் உரை அமைந்துள்ளது.

    எனவே தமிழக கவர்னர் உரையில் இல்லாத பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிடப்பட்டு மக்கள் நலன் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GKVasan

    கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்கு மேலும் ரூ.13 ஆயிரம் கோடி தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #GajaStorm
    திருவொற்றியூர்:

    சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மகத்தான வெற்றி பெறுவோம். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்துகளை உதாசீனப்படுத்த முடியாது. அவர் கூறியிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடையவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மை வெளிவரும்.

    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரித்தபோது ஜெயின் கமிஷனும் விசாரித்தது. அதேபோல தமிழக அரசும் விசாரணை குழு அமைத்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும். இவர்களை அழைத்து வந்து வாக்குமூலங்களை மட்டும் வாங்குவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையும் வெளி வராது. அதனால் அவர்களுக்கு நல்ல ‘டிரீட்மெண்ட்’ கொடுக்கவேண்டும்.

    யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள், சம்பந்தப்பட்டவர்களோ வாக்குமூலம் அளித்தவர்கள் என அனைவரையும் போலீஸ் டிரீட்மெண்டில் விசாரிக்கப்படவேண்டும் மரணத்தில் எழும் சந்தேகத்தில் தமிழக அரசு தேவையென்றால் விசாரணை கமிஷன் அமைக்கும். தவறு செய்யவில்லை என்றால் நேரடியாக வந்து வாக்குமூலம் கொடுத்துவிட்டு செல்லட்டும். சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.



    ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவது என்று சொன்னால் ஒரே குடும்பம் சசிகலாவும் தினகரனும்தான். அவர்களால் மட்டுமே ஜெயலலிதாவிற்கு இழுக்கு ஏற்படுகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசிடம் ரூ.15,600 கோடி கேட்டதற்கு 1,146 கோடி கொடுத்துள்ளனர். இது யானை பசிக்கு சோளப்பொரி போல. கொஞ்சம் பெரியதாக தெரிகிறதே, தவிர யானை பசியை போக்குவதாக இல்லை. நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

    தற்போது ஒதுக்கிய தொகையை உடனடி தேவைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம். தவிர நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுப்பதற்கு அழுத்தம் தரவேண்டும். கண்டிப்பாக கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterJayakumar #GajaStorm
    கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்ட இடத்தில் மத்திய அரசு ரூ.1146 கோடி வழங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #GajaStorm #TNGovernment
    சென்னை:

    தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் மழைக்கு 63 பேர் பலியானார்கள். லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை, பலா, வாழை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்து விழுந்தன.

    ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.

    புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.1000 கோடியை ஒதுக்கி மீட்பு பணிகளை செய்து வந்தது.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 22-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து புயல் சேத விவரங்களை தெரிவித்தார். அப்போது தற்காலிக நிவாரண பணிக்கு ரூ.1,431 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.14 ஆயிரத்து 910 கோடியும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அன்று மாலையே மத்திய குழு சென்னை வந்து, புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடியும், 2-ம் கட்டமாக ரூ.353 கோடியும் வழங்கியது.

    மத்திய குழுவினர் தாக்கல் செய்யும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.1,146 கோடியே 12 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

    இது தமிழக அரசு கேட்டுக்கொண்ட நிதியில் வெறும் 7.64 சதவீதம் என்பதால் மத்திய அரசு மீது தமிழக அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

    ஏனென்றால் இந்த தொகையை வைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க முடியாது என்று தமிழக அரசு கருதுகிறது.

    ஏற்கனவே சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை சீரமைக்கவே ரூ. 800 கோடிக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    இடிந்து தரைமட்டமான வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான போதிய நிதி இல்லை. சாய்ந்து விழுந்த 8 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அதற்கும் நிதி இல்லை.

    வாழை, பலா, முந்திரி நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நிதி கிடையாது. மத்திய அரசு தரும் நிதியை வைத்து ஓரளவு சமாளிக்கலாம் என அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு பதில் ரூ.1146 கோடியை ஒதுக்கியது தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புயல் சேதத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர் சேத மதிப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருந்த நிலையிலும் மத்திய அரசு வெறும் ரூ.1,146 கோடியைதான் ஒதுக்கி உள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கி விட்டது. இதில் இருந்து அரசு எப்படி மீளப் போகிறது என்று தெரியவில்லை என்று அந்த அதிகாரி ஆதங்கத்துடன் தெரிவித்தார். #GajaStorm #TNGovernment

    கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது என்றும், தமிழக அரசு கேட்ட முழுத்தொகையை வழங்கவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #GajaStorm #AnbuManiRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘கஜா’ புயலால் ஒட்டுமொத்தமாக ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மிகவும் குறைவாக ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் தான் இழப்பீடு கோரியது. ஆனால் அதைக்கூட முழுமையாக வழங்காமல் மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.1,146 கோடி மட்டும் வழங்கியது போதாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, இது யானை பசிக்கு சோளப்பொரி போடுவதைப் போல உள்ளது.

    ‘கஜா’ புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 7.64 சதவீதம் மட்டும் தான். இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவி என்பது மிகக்குறைவாகவே உள்ளது. 2015-ம் ஆண்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு ரூ.13 ஆயிரத்து 731 கோடி நிதி கோரியது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.1,940 கோடி மட்டுமே வழங்கியது. இது கேட்டதில் 15 சதவீதம் மட்டும் தான்.



    2016-ம் ஆண்டு ‘வார்தா’ புயலுக்காக தமிழக அரசு ரூ.22 ஆயிரத்து 573 கோடி கோரியது. ஆனால் கிடைத்தது ரூ.266.17 கோடி மட்டும் தான். இது கிட்டத்தட்ட 1 சதவீதம் மட்டுமே. 2017-ம் ஆண்டு வறட்சிக்காக தமிழக அரசு கோரியது ரூ.39 ஆயிரத்து 565 கோடி. ஆனால், கிடைத்தது ரூ.1,748 கோடி தான். இது தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 4 சதவீதம் மட்டும் தான். 2017-ம் ஆண்டு ‘ஒகி’ புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியது ரூ.9 ஆயிரத்து 300 கோடி. ஆனால் கிடைத்தது ரூ.133 கோடி மட்டும் தான். இது 1.5 சதவீத நிவாரண உதவி மட்டுமே.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அவ்வாறு இருக்கும்போது அவர்கள் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்தனர்? பரிந்துரை செய்த தொகையில் எத்தனை சதவீதத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது? என்பது தெரியவில்லை. ‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிகம். எனவே மத்திய அரசு, தமிழக அரசு கோரியதைப் போன்று ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaStorm #AnbuManiRamadoss
    ×