search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer suicide attempt"

    கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:
     
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த வடிவேல்& கலைச்செல்வி தம்பதியரின் மகன் நீலகண்டன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கஜா புயலால் இவர் வசிக்கும் குடிசை வீடு மிகுந்த சேதத்துக்குள்ளானது.

    இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர். தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய் துறையினர் வழங்கியுள்ளனர். ஆனால் மிகுந்த சேதத்துக்குள்ளான நீலகண்டன் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் வருவாய்த்துறையினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த நீலகண்டன் தனது வீட்டு ரேசன்கடை அருகே இருந்த டிரான்ஸ்பாரத்தில் ஏறி தனக்கு நிவாரணப் பொருட்கள் வழங்ககோரி கோஷமிட்டவாரே மின்சாரம் பாயும் மின்கம்பியை பிடித்து விட்டார். இதில் நீலகண்டன் உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீலகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நீலகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தகராறில் திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 67). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள், மகன் கார்த்திகேயன் (32).

    இவர்கள் இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வாசலில் நின்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீப்பெட்டியை பிடுங்கினர்.

    அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்து இருப்பதாகவும், இதுபற்றி கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் கூறினர்.

    3 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையயம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த போதுமலை ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 41), விவசாயி. இவரது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அண்ணாமலை ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தனது மகள் இன்னும் திரும்பிவராததாலும் போலீசார் கண்டுபிடித்து தராததாலும் அண்ணாமலை இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த நல்லிபாளையம் போலீசார் அவரை மடக்கிடிப்பித்து கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் சாரணை நடத்தி வருகின்றனர்.
    ×