search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nungu"

    • உடன்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வரமக்கள் தயங்குகின்றனர்.
    • கம்பங்கூழ், கேப்பை, மோர், நுங்கு போன்ற சாலையோர கடைகள் ஏராளமாக வந்து விட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டாரபகுதிக்கு உட்பட்ட உடன்குடி, மெய்ஞானபுரம், பரமன்குறிச்சி பஜார் வீதிகள் தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கம்பங்கூழ், மோர், நுங்கு

    வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வரமக்கள் தயங்குகின்றனர். வீடுகளிலும், தோட்டங்களிலும் முடங்குகின்றனர். அவசர தேவைக்கு மட்டுமே பஜார் வீதிக்கு வருகின்றனர்.இதனால் கம்பங்கூழ், கேப்பை, மோர், நுங்கு போன்ற சாலையோர கடைகள் ஏராளமாக வந்து விட்டது.

    நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் நுங்குகளை வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

    மேலும் இளநீர், சர்பத் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை நடைபெறுகிறது. கோடைகாலத்தைவிட தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    • நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

    நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.

    100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம். இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம்.

    மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    • கரூர் மாவட்டத்தில் பனை நுங்கு விற்பனை களை கட்டியுள்ளது
    • ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நுங்குகளின் வரத்து மிகுதியால் ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலின் உக்கிரத்தால் தற்போது வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது பற்றி நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில்: உள்ளூரில் பனை மரங்களை செங்கல் சூளைக்காக வெட்டி விடுகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து நுங்கு சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். லாரி வாடகை, வெட்டுக் கூலி உள்ளிட்ட செலவினங்களால் நுங்கு விலை தரத்திற்கு ஏற்ப விற்று வருகிறோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் அதிகமாக நுங்குகளை விரும்பி வாங்குகின்றனர் என்றார்.

    • வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்
    • நகர கிராம நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது

    காங்கயம்

    காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் நடப்பாண்டில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் ெதாடங்கியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துள்ள மற்றும் முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த, உடல் சூட்டை தணிக்கும் பனை நுங்கை தேடிச்சென்று சாப்பிடுகின்றனர்.அந்தவகையில் தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. நகர, கிராம, நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பொதுமக்களிடம் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர். 3 கண் உள்ள ஒரு நுங்கு ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கிச் சென்றனர்.

    கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில்  வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் வீசி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயி–லின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி குமார–பாளையம் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது.

    வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தைக்  கொண்டுள்ளது நுங்கு. அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படு–வதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.

     இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவ–தோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் பனை மரங்கள் விழுந்ததால் நுங்கு விலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி, கோவில்பத்து வெள்ளம்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, மணக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மற்றும் தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் இருந்தன. இவை அணைத்தும் கஜா புயலில் விழுந்து விட்டது.

    இதனால் கோடையின் வெப்பத்தை தணிக்க பனைநுங்குகளையும் இளநீரையும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வேளையில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலைகொடுத்து பனை நுங்கையும், இளநீரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

    கஜா புயலின் கோரதாண்டவத்தால் பனை, தென்னை போன்ற மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அதிக அளவில் இயற்கையாக இப்பகுதியில் கிடைக்கும் பனைநுங்கு மற்றும் இளநீரை விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது பனைநுங்கு மற்றும் இளநீர் போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் இளநீர் மற்றும் பனைநுங்கை கொண்டு வந்து இளநீர் ரூ.40க்கும், பனைநுங்கு ரூ.10-க்கு மூன்றும் என விற்பனை செய்கிறார்கள்.

    இயற்கையாக இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக சாப்பிட்ட பனைநுங்கை தற்போது காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசு கொடுத்தாலும் அதிக அளவில் இளநீர் மற்றும் நுங்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

    ×