search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் பனை நுங்கு விற்பனை சூடுபிடிப்பு
    X

    கரூர் மாவட்டத்தில் பனை நுங்கு விற்பனை சூடுபிடிப்பு

    • கரூர் மாவட்டத்தில் பனை நுங்கு விற்பனை களை கட்டியுள்ளது
    • ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நுங்குகளின் வரத்து மிகுதியால் ரூ.20க்கு 2 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலின் உக்கிரத்தால் தற்போது வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது பற்றி நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில்: உள்ளூரில் பனை மரங்களை செங்கல் சூளைக்காக வெட்டி விடுகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து நுங்கு சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். லாரி வாடகை, வெட்டுக் கூலி உள்ளிட்ட செலவினங்களால் நுங்கு விலை தரத்திற்கு ஏற்ப விற்று வருகிறோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் அதிகமாக நுங்குகளை விரும்பி வாங்குகின்றனர் என்றார்.

    Next Story
    ×