search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vedaranyam area"

    வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் பனை மரங்கள் விழுந்ததால் நுங்கு விலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி, கோவில்பத்து வெள்ளம்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, மணக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மற்றும் தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் இருந்தன. இவை அணைத்தும் கஜா புயலில் விழுந்து விட்டது.

    இதனால் கோடையின் வெப்பத்தை தணிக்க பனைநுங்குகளையும் இளநீரையும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வேளையில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலைகொடுத்து பனை நுங்கையும், இளநீரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

    கஜா புயலின் கோரதாண்டவத்தால் பனை, தென்னை போன்ற மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அதிக அளவில் இயற்கையாக இப்பகுதியில் கிடைக்கும் பனைநுங்கு மற்றும் இளநீரை விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது பனைநுங்கு மற்றும் இளநீர் போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் இளநீர் மற்றும் பனைநுங்கை கொண்டு வந்து இளநீர் ரூ.40க்கும், பனைநுங்கு ரூ.10-க்கு மூன்றும் என விற்பனை செய்கிறார்கள்.

    இயற்கையாக இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக சாப்பிட்ட பனைநுங்கை தற்போது காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசு கொடுத்தாலும் அதிக அளவில் இளநீர் மற்றும் நுங்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

    வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கொன்றை மரங்கள் பூத்து குலுங்கி மஞ்சள் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கொன்றை மரங்கள் பூத்து குலுங்கி மஞ்சள் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது. கொன்றை பூவில் அதிகளவில் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில், தங்க மழை மரம் ‘அக்வந்தா‘ என்று அழைக்கப்படுகிறது, அதாவது ‘நோயாளியின் கொலையாளி‘ என்று அர்த்தம்.

    சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக்குணம் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது. சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம், பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, வயிற்றுக்கோளாறு, போன்றவையும் சரியாகும்.

    சரக்கொன்றை காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை, சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை சரியாகும். மேலும் கொன்றை பூ அதிகளவில் பூத்தால் அந்த வருடம் நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

    ×