search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் பகுதியில் பூத்துக் குலுங்கும் கொன்றைப் பூக்கள்
    X

    வேதாரண்யம் பகுதியில் பூத்துக் குலுங்கும் கொன்றைப் பூக்கள்

    வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கொன்றை மரங்கள் பூத்து குலுங்கி மஞ்சள் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கொன்றை மரங்கள் பூத்து குலுங்கி மஞ்சள் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது. கொன்றை பூவில் அதிகளவில் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில், தங்க மழை மரம் ‘அக்வந்தா‘ என்று அழைக்கப்படுகிறது, அதாவது ‘நோயாளியின் கொலையாளி‘ என்று அர்த்தம்.

    சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக்குணம் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது. சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம், பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, வயிற்றுக்கோளாறு, போன்றவையும் சரியாகும்.

    சரக்கொன்றை காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை, சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை சரியாகும். மேலும் கொன்றை பூ அதிகளவில் பூத்தால் அந்த வருடம் நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×