என் மலர்
நீங்கள் தேடியது "relief work"
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் நடத்தைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர்கள் புயல் நிவாரண ஆய்வுகள் நடத்த முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அனுமதி இல்லாமல் திருவாரூர் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
புயல் சம்பந்தமாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிவாரண நிதி, பொருட்கள் ஆகியவற்றை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறி செயல்படும் எந்தவொரு செயலும் தடுக்கப்படும்.
தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படிதான் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 19 தொகுதிகளுக்கு கோர்ட்டின் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு இருக்கிறது.
19 தொகுதி தேர்தல் தொடர்பாக அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எந்திரங்கள், 303 வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வெளிப்படையான, சுமூகமான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகள், பண விநியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இது கண்காணிப்பு பணிக்கு மேலும் வலுசேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tiruvarurconstituency
நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னதாக நேற்று சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்றார்.
அங்கு நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன் உடனே தஞ்சை கிளம்புவதாகவும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல போவதாகவும் கூறினார். இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத குக்கிராமங்களுக்கு சென்று வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று பிற்பகல் தஞ்சைக்கு பயணமானார்.
நேற்று திருவாரூர்- மன்னார்குடி சாலையில் உள்ள கோட்டூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் சுற்று வட்டாரத்திலுள்ள அம்மாபேட்டை, கோட்டூர், அம்மையப்பன் ஆகிய இடங்களிலிருந்து பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் கமல் அந்த சாலை வழியாக திருவாரூர் சென்று கொண்டிருந்தார். கமல் வருவதை அறிந்த மக்கள், அவரை முற்றுகையிட்டனர். அவரது வாகனத்துக்கும் வழிவிடவில்லை. இதனால் கமல், உள்ளிட்டவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுவழியிலேயே நின்றனர்.
போராட்டக்காரர்களிடம் கமல் நிவாரண பொருட்களுடன் வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகவே வந்திருக்கிறோம் என்று கூறி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதன்பின்னர், பொதுமக்கள், கமலுடன் இருந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் வைத்திருந்த உணவு பொட்டலங்களை பார்த்த பிறகு மனம் வருந்தினர். கமலின் பயணத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். இதுகுறித்து கமல் நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்டா பகுதிகளுக்கு பார்வையிட சென்ற முதல்வரின் பயணம் மழை காரணமாக பாதியில் ரத்தானது.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக தாக்கி கூறியிருப்பதாவது:-
“தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது.
கேட்கிறதா அரசுக்கு? அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள், கோபத்தில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொழுது உணவுப் பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார். #GajaCyclone #ReliefWork #KamalHaasan
மன்னார்குடி:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீணம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை, எனவே பொதுமக்கள் வாய்க்கால், குளத்தில் உள்ள நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுகாதாரம், குடிநீருக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கபட்ட மக்கள் குடிநீர் விநியோகம், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற முடியவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாத மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், மற்றும் பணியாளர்கள் அழைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #Gajastorm #Storm


துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கேரள வெள்ள சேதம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மூத்த அதிகாரிகள், வெங்கையா நாயுடுவின் செயலாளர்களும் பங்கேற்றனர். அப்போது தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அவருடைய ஒரு மாத சம்பளம் ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளனர். #KeralaFlood #VenkaiahNaidu